உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

பொன்மொழிகள்-11

0

Posted on : Friday, July 16, 2010 | By : ஜெயராஜன் | In :

நட்பு உடையக்கூடிய பொருள் அதைக் கவனத்துடன் கையாள வேண்டும்.
**********
முதுமைக்கு முன் இளமையையும்
நோய்க்கு முன் உடல் நலத்தையும்
வறுமைக்கு முன் செல்வத்தையும்
வேலையில் ஈடுபடுமுன் ஓய்வையும் 
மரணம் வருமுன் வாழ்க்கையையும்
அரிதாகக் கருதி நன்றாகப் பயன் படுத்திக் கொள்ளுங்கள்.
**********
ஒரு பணக்காரன் சொல்வதை பத்து ஏழைகள் சேர்ந்து மாற்றி விடலாம்.
இது ஜனநாயகத்தின் பலம்.
ஒரு அறிவாளி சொல்வதைப் பத்து முட்டாள்கள் சேர்ந்து மாற்றிவிடலாம்.
இது ஜனநாயகத்தின் பலவீனம்.
**********
விருப்பம் நிறைவேறாத போதுதான் ஒருவனின்உண்மையான குணம் வெளிப்படும்.
**********
நாம் பிறரிடம் கண்டு கேலி செய்யும் குற்றங்கள்,நமக்குள் நம்மையே கேலி செய்யும்.
**********
வன்மம் மிகுந்தவன் தன எதிரியை இழிவு செய்வதற்காக எவ்வளவு கீழான செயலையும் செய்யத் தயங்க மாட்டான்.
**********
ஆடு,'மே,மே,' என்று கத்தினால் அறுக்கிறவன் புத்தனாகிவிடுவானா?
**********
முடியுமானால் பிறரை விட அறிவாளியாக இரு;ஆனால் அதை அவர்களிடம் கூறாதே.
**********
தன்னை அதிக புத்திசாலியாக எண்ணுவதே மனிதனின் பலவீனம்.
**********
அடக்கி வைக்கப்பட்ட கோபமே வெறுப்பு.
**********
துயரத்திற்கு ஒரே மாற்று மருந்து சாதனை தான்.
**********
சொல்லில் இங்கிதம் நாவன்மையை விடச் சிறந்தது.
**********
அறிவற்ற அச்சம் இடையூறுகளை இரட்டிப்பாக்குகிறது.
**********
நல்ல வரவேற்பு பாதி விருந்துக்கு சமம்.
**********
முகம் மனிதனின் ஓவியம்
கண்கள் அதன் தூதுவர்கள்.
**********
தவறு செய்வது மனிதத் தனம்.
அதன் பழியை மற்றவர் மீது சுமத்துவது மனித குணம்.
**********
கடன் வாங்குபவர்கள் கவலையையும் சேர்த்தே வாங்குகிறார்கள்.
**********

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (0)

Post a Comment