ஒரு நிறுவனத்தில் ஓய்வூதியத் திட்டம் ஒன்றை செயல் படுத்த நினைத்தனர்.இந்தத் திட்டத்தை செயல் படுத்த அனைத்து தொழிலாளர்களின் சம்மதமும் வேண்டும்.சம்மதம் தெரிவித்து ஜான் தவிர மற்ற அனைவரும் கையெழுத்திட்டு விட்டனர்.அது ஒரு நல்ல திட்டம்.ஆனால் ஜான் கையெழுத்து இடாததால் செயல் படுத்த முடியவில்லை.
அவனது சக நண்பர்களும்,மேற்பார்வையாளரும்,மேலாளரும் விளக்கிக் கூறியும் ஜான் ஏற்றுக் கொள்ளவில்லை.முதலாளிக்குத் தகவல் தெரிந்ததும் ஜானை அவர் அறைக்கு வரச்செய்து,''ஜான்,இதோ பேனா.ஓய்வூதியத் திட்டத்திற்கான இந்தத் தாள்களில் கையெழுத்திடு.நீ மறுத்தால் உன்னை வேலையை விட்டு நீக்க வேண்டியிருக்கும்.''என்றார்.ஜான் உடனே கையெழுத்திட்டான்.முதலாளி,ஏன் முதலில் கையெழுத்தப் போடவில்லை என்று கேட்டார்.ஜான் சொன்னான்,''இந்தத் திட்டத்தைப் பற்றி தங்களைப் போல யாரும் விளக்கமாகச் சொல்லவில்லை,முதலாளி.''என்றான்.
|
|
Post a Comment