உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

சுமை

0

Posted on : Wednesday, July 14, 2010 | By : ஜெயராஜன் | In :

நீங்கள் உங்கள் அன்பைக் கூட ஒரு சுமையாக மாற்றிவிட்டால் நீங்கள் மகிழ்ச்சியாக  இருக்க முடியாது.உங்கள் காதலைக் கூட சுமையாக மாற்றிவிட்டால்,உங்கள் பிரார்த்தனையும் சுமையாகிவிடும்.உங்களுக்கு அன்பு இருந்தால் நீங்கள் எங்கே இருந்தாலும் அது சுமை இல்லை.நீங்கள் உங்கள் பிள்ளைகளை விட்டுப் பிரிந்திருந்தாலும்கூட அவர்கள் உங்கள் அன்பைப் புரிந்து கொள்வார்கள்.அவர்களை நேசிக்காமல் அவர்களுக்கு உதவிக் கொண்டிருந்தாலும் அதுபொய்யான விஷயம் என்பது அவர்களுக்குப் புரிந்துவிடும்.சிலர்,''நான் வாழ் நாள் முழுவதும் உழைத்துவிட்டேன்,ஆனால் ஒருவரும் நன்றியுடன் இல்லை,''என்பார்கள்.எப்படி இருப்பார்கள்?நீங்கள் அவர்களை ஒரு பாரம்போல சுமந்து வந்தீர்கள்.நீங்கள் அன்போடு செய்வதையும்,கடனுக்கு செய்வதையும் சிறு குழந்தை கூடப் புரிந்து கொள்ளும்.கடமை என்ற வார்த்தையே  அசிங்கமானது.வன்முறையானது.அது உங்கள் கவலையை,அக்கறையைக் காட்டுகிறது.ஆனால் உங்கள் இயல்பை,தன்னிச்சையான தனமையைக் காட்டவில்லை.

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (0)

Post a Comment