உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

பீதி

0

Posted on : Monday, July 19, 2010 | By : ஜெயராஜன் | In :

ஹுய்த்ஷு  லியாங் நாட்டு பிரதம மந்திரியாக இருந்தார்.அவருக்குக் கிடைத்த தகவலின் படி சுவாங்க்தசு  அவர் பதவி மீது ஆசைப்பட்டு அவரை விலக்கிவிட்டு,தான் அப்பதவியில் இருக்க சதி செய்வதாக நம்பினார்.
சுவாங்க்தசு லியாங் நகருக்கு விஜயம் செய்த போது பிரதம மந்திரி,அவரைக் கைது செய்து வரக் காவலரை அனுப்பினார்.அவர்கள் இரவு பகலாக மூன்று நாட்கள் தேடியும் அவரைக் கண்டு பிடிக்க முடியவில்லை.இதற்கிடையே சுவாங்க்தசு தானாக  ஹுய்த்ஷு முன்  தோன்றி  அவரிடம்  சொன்னார் ,'' தெற்கே வாழும் புராண காலப் பறவை,அதன் பெயர் தீப்பறவை.அது முதுமை அடைவதேயில்லையாம்.அது பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறாயா?தெற்குக் கடலிருந்து எழுகின்ற இந்த மரணமில்லா தீப்பறவை வடக்குக் கடலுக்குப் பறக்கிறது.சில புனித மரங்களைத் தவிர வேறு எங்கும் அதுஎங்கும் இறங்குவதில்லை.அது எவ்வித உணவையும் தொடுவதில்லை.அபூர்வமான சில பழங்களை மட்டுமே உணவாக்கிக் கொள்கிறது.அது தூய்மையான நீரூற்றிலிருந்து வரும் நீரை மட்டும் பருகுகிறது.ஒரு முறை ஒரு ஆந்தை ஏற்கனவே அழுகிப் போன செத்த எலியைத் தின்று கொண்டிருக்கும்போது  அது தனக்கு மேலே பறந்து செல்லும் தீப்பறவையைக் கண்டவுடன் திடுக்கிட்டு பயந்து போய் கூக்குரலிட்டு தான் தின்று கொண்டிருந்த செத்த எலியை மிகவும் கெட்டியாக பிடித்துக் கொண்டதாம்.பிரதம மந்திரியே!நீங்களும் அந்த ஆந்தையைப் போல ஏன் இப்படிப் பயந்து உங்கள் மந்திரி பதவியைப் பிடித்துக்கொண்டு பீதியில் கூக்குரல் இடுகிறீர்கள்?''

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (0)

Post a Comment