சாக்ரடீஸ் இறக்கும் தருவாயில் சீடர்கள் இறுதிச்சடங்குகள் பற்றிக் கவலைப்பட ஆரம்பித்தனர்.அவர்கள் அவரை நோக்கி,'நாங்கள் என்ன செய்ய வேண்டும்?'என்று கேட்டனர்.அதற்கு சாக்ரடீஸ் சொன்னார்,''எதிரிகள் என்னைக் கொல்ல விஷம் தருகிறார்கள்.நீங்கள் என்னை எப்படிப் புதைக்கலாம் எனத் திட்டமிடுகிறீர்கள்.நீங்கள் இரு கூட்டத்தினருமே என் இறப்பிலேயே குறியாக இருக்கிறீர்கள்.யாருமே என்னைப் பற்றிக் கவலைப் படுவதாகத் தெரியவில்லை.''
**********
சீன ஞானி லாவோத்சுவின் சீடர் சுவாங்க்தசு இறக்கும் தருவாயில் அவரது சீடர்கள் ஒரு பிரமாண்டமான இறுதிச்சடங்கிற்கு ஏற்பாடு செய்தனர்..அவர்கள் சுவாங்க்தசுவிடம் சொன்னார்கள்,'காக்கைகளும் குருவிகளும் எங்கள் குருவின் உடலை உண்டு விடுமே என்று பயப்படுகிறோம்.' சுவாங்க்தசு பதிலளித்தார்,''பூமிக்கு மேலேஎன் உடல் இருந்தால் அது காக்கைகளாலும் பருந்துகளாலும் உண்ணப்படும்.பூமிக்குக் கீழே புதைத்தால்,எறும்புகளாலும் புழுக்க லாலும் உண்ணப்படும்.இரண்டு விதத்திலும் என் உடல் உண்ணப்படும்.பிறகு ஏன் பரவைகளுக்காகப் பயப்படுகிறீர்கள்?''
|
|
Post a Comment