ஒரு அழகிய இளவரசியை மணக்க நடக்கவிருந்த போட்டியில் கலந்து கொள்ள நான்கு இளைஞர்கள் வந்திருந்தனர்.போட்டி இது தான்.''ஒரு பெரிய சதுரமான அறையில் கம்பளம் விரிக்கப்பட்டிருக்கும்;நான்கு மூலைகளிலும் முக்காலிகள்போடப்பட்டிருக்கும்.இளவரசி அறையின் மையத்தில் நிற்பாள்; முக்காலியில் நின்று கொண்டு ,கம்பளியை மிதிக்காமலும் ,தொடாமலும் இளவரசியின் கரத்தைப் பிடிக்க வேண்டும்.அவ்வாறு செய்பவர் இளவரசியை மணக்கத் தகுதி பெறுவார்.''எப்படிப் பார்த்தாலும் இளவரசிக்கும் அறையின் ஒவ்வொரு மூலைக்கும் உள்ள தூரத்தைப் பார்த்தால்,இது சாத்தியம் என்று தோன்றவில்லை.சிறிது நேரத்தில் மூவர் தோல்வியை ஒப்புக் கொண்டு விட்டனர்.நாலாவது ஆள் சிறிது நேரம் யோசித்து விட்டு,''இளவரசியே,நான் உன்னை மனப்பூர்வமாகக் காதலிக்கிறேன்.,நீயும் என்னை விரும்பினால்,. ஓடி வந்து என் கரத்தைக் கைப்பற்று.''என்றான்.போட்டியின் விதிகளின்படி போட்டியாளர் தானே கம்பளத்தை மிதிக்கவோ தொடவோ கூடாது இளவரசி மிதிக்கலாமே?மாற்றி யோசித்த இளவரசனின் புத்திக் கூர்மையை அறிந்து இளவரசியும் ஓடிச் சென்று அவன் கரம் பற்றினாள்.
|
|
Post a Comment