உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

நல்லுபதேசம்

0

Posted on : Wednesday, July 21, 2010 | By : ஜெயராஜன் | In :

நோபல் பரிசு பெற்ற ஒருவரை வரவேற்பதற்காக சிகாகோ ரயில் நிலையத்தில் ஏராளமான தலைவர்களும் அதிகாரிகளும் புகைப்படக் காரர்களும் குழுமியிருந்தனர்.ரயில் வந்து நின்றவுடன் விருது பெற்றவர் வண்டியிலிருந்து இறங்கினார்.அவரோடு கை குலுக்கவும் அவரைப் பாராட்டுவதாகக் காட்டிக் கொள்ளவும் பலர் போட்டியிட்டனர்.புகைப்பட விளக்குகள் மிளிர்ந்த வண்ணமாய் இருந்தன.எல்லோருடைய கவனமும் அவர் மீது இருக்க அவர் கவனம் மட்டும்,தன சுமைகளைத்  தூக்க முடியாமல் தவித்துக் கொண்டிருந்த ஒரு மூதாட்டியின் பக்கம்இருந்தது.அவர் விரைந்து சென்று அந்த மூதாட்டியின்  சுமைகளைத் தூக்கி அவரை ஒரு பேருந்தில் ஏற்றிவிட்டுப்  பின்கூடியிருந்தவர்கள் அருகில் வந்து அவர்களுக்குத் தன நன்றியைத் தெரிவித்தார்.அவர்களை சிறிது காக்க வைக்க நேரிட்டதற்காக மன்னிப்பு கோரினார்.இந்த நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டிருந்த ஒருவர் சொன்னார்,''ஒரு நல்லுபதேசம் உயிருடன் நடந்து செல்வதை என் வாழ்வில் இப்போது தான் முதல் முறையாகப் பார்க்கிறேன்.''
அந்த நல்ல மனிதரின் பெயர் டாக்டர் ஆல்பர்ட் ஷ்வெய்த்சர்

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (0)

Post a Comment