உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

எளிமை

0

Posted on : Monday, July 19, 2010 | By : ஜெயராஜன் | In :

ஒருவன் ஒரு நாளைக்கு ஒரு வேளை தான் உணவு உட்கொள்ளுகிறான்.மிக மலிவான ஆடைகளையே அணிகிறான்.மரத்தடியில் வாழ்கிறான்.அவன் தன்னைத் துறவி என்றுஎண்ணிக் கொள்ளுகிறான்.ஆனால் அவன் பக்கம் ஒரு பணக்காரன் கடந்து செல்லும் போது,துறவிக்கு  அவன் மீது குறை காணும் இயல்பு தோன்றி,''இந்தப் பாவிக்கு என்ன நிகழப் போகிறதோ,இவனுக்கு நரகம் தான் கிடைக்கும்.,''என்று எண்ணி இரக்கப்படுகிறான்.இப்படி நினைத்தால் அந்தத் துறவி எளிமையானவரில்லை.ஏனெனில் அவர் மனதில் தான் உயர்ந்தவன்,அப்பணக்காரன் தாழ்ந்தவன் என்ற வித்தியாசம் வந்து விடுகிறது. எப்போதெல்லாம் வேற்றுமை வித்தியாசம்  வந்து விடுகிறதோ அங்கு தன முனைப்பு வந்து விடுகிறது.தன் முனைப்பு இல்லாததுதான் எளிமையாகும்.

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (0)

Post a Comment