உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

உதட்டளவில் அற்புதம்

1

Posted on : Monday, October 22, 2012 | By : ஜெயராஜன் | In :

உங்கள் எண்ணங்களுக்கு சிறகு வார்த்தைதான்.உயரப் பறந்தாலும் பறக்கும்,புழுதியில் விழுந்தாலும் விழும்.அது உங்கள் வார்த்தையின் தன்மையைப் பொறுத்தது.நீங்கள் வார்த்தை வடிவில்தான் சிந்திக்கிறீர்கள். உடலுக்கு ஆடைபோல,எண்ணங்களுக்கு வார்த்தைகள்.வார்த்தைகளின்றி மனிதர்களை இயக்க முடியாது.சரியான வார்த்தைகள்தான் உங்கள் கருவி.மற்றவர்களை உங்கள் வசமாக்குவது அவைதான்.உணர்வுகளைத் தட்டி எழுப்பிடும் சிறந்த ஆயுதம் பேச்சு.இந்த ஆயுதத்தைத் தவறாகப் பயன்படுத்தினால் அது உங்கள் பக்கமே திரும்பக் கூடும்.சின்னச்சின்ன வார்த்தைகளைத் தேர்ந்தெடுங்கள்.நாலு வார்த்தையில் அழகாகச் சொல்லக்கூடிய ஒரு விஷயத்தை நாள் முழுக்கச் சொன்னாலும் பயன்படாது.எதையும் புன்முறுவலோடு சொல்லுங்கள்.இனிய வார்த்தைகளைப்போல நெஞ்சைத் தொடுவது எதுவும் இல்லை.நிறையக் கேளுங்கள் குறையப் பேசுங்கள்.அதற்காகத்தான் உங்களுக்கு இரண்டு காதுகளும் ஒரு வாயும் உள்ளன.

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (1)

அருமை... நன்றி சார்...

Post a Comment