உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

அடமானம்

2

Posted on : Tuesday, October 09, 2012 | By : ஜெயராஜன் | In :

கோட் சூட் அணிந்த ஒருவர் ஒரு உணவகத்திற்கு வந்து  சாப்பிட்டு  முடித்தவுடன் பணம் கொடுப்பதற்கு சட்டைப் பையில் கையை விட்டபோதுதான் பர்சை எடுத்துவர மறந்தது தெரிய வந்தது.அவருக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. மிகுந்த சங்கடத்துடன் உணவக உரிமையாளரிடம் சென்று தன் நிலையை விளக்கினார்.பணத்திற்கு ஈடாக தன்  'கோட்'டைக் கொடுப்பதாகவும் உரிய பணத்தைக் கொடுத்துவிட்டு திரும்பப் பெற்றுக் கொள்வதாகவும்  கூறினார். அவரும் அதை வாங்கிக் கொண்டே ''அதனால் பரவாயில்லை.உங்கள் மீது எனக்கு  நம்பிக்கை இருக்கிறது.ஆனால் எனக்கு மறந்து போய்விடக் கூடாது அல்லவா?அதனால் இந்த கரும் பலகையில் உங்கள் பெயரையும் நீங்கள் கொடுக்க வேண்டிய  தொகையையும் எழுதி வைப்பேன்,'' என்றார். அதிர்ச்சியுற்ற அந்த மனிதர்,''அய்யோ!அப்படியானால் எல்லோரும் அதைப் படிப்பார்கள் .இது எனக்கு அசிங்கம் அல்லவா?''என்று கேட்டார் . கடைக்காரரும்,'' யோசிக்க வேண்டிய விசயம்தான்.ஒன்று செய்யலாம்.நீங்கள் வரும் வரை உங்கள் கோட்டை அந்தப் பலகையின் மீது மாட்டி வைக்கிறேன்.அப்போது யாரும் படிக்க மாட்டார்கள் அல்லவா?''என்றதும் வந்தவருக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை.

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (2)

முதலாளி பற்றி என்ன சொல்வதென்று எனக்கும் தெரியவில்லை

அது சரி... பாவம்...

Post a Comment