உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

பொறாமைதான்

3

Posted on : Thursday, October 04, 2012 | By : ஜெயராஜன் | In :

காட்டில் மான் கழுதையிடம் கேட்டது,''உன் குரலை சிங்கம்,புலி உட்பட எல்லா மிருகங்களும் வெறுக்கின்றனவே,அது ஏன்?''கழுதை  சொன்னது,''எல்லாம் பொறாமையினால்தான் நண்பா!''
********
பாகிஸ்தான்காரர் ஒருவரும் இந்தியர் ஒருவரும் அருகருகே அமர்ந்து ஒரு விமானத்தில் பயணம் செய்தனர்.பாகிஸ்தானி கோக் குடிக்க ஆசைப்பட்டார்.இந்தியரும் உடனே எழுந்து போய் கோக் ஒன்று வாங்கப் போனார்.அந்த சமயம் பாகிஸ்தானி இந்தியர் கழட்டி  வைத்திருந்த சூவை எடுத்து அதில் எச்சல் துப்பி வைத்தார்.பின் இந்தியர் கோக் கொண்டு வந்து குடித்ததும் நன்றி சொல்லிவிட்டு இன்னொரு கோக் குடிக்க விரும்புவதாகச் சொன்னார்.இந்தியரும் தயங்காது உடனே சென்று அடுத்த கோக்கை வாங்கி வரச்செல்ல,பாகிஸ்தானியும் இன்னொரு சூவை எடுத்து அதில் எச்சல் துப்பி வைத்தார்.இந்தியர் வந்ததும் அவர் கொடுத்த கோக்கை ரசித்துக் குடித்தார்.இறங்கும் இடம் நெருங்கியது.இந்தியர் தன சூவை எடுத்துகாலில் அணிந்தார்.அப்போதுதான் அவர் அதில் எச்சல் துப்பப்பட்டிருப்பதை உணர்ந்தார்.உடனே,அவர் பாகிஸ்தானியிடம் கேட்டார்,''ஏன் நண்பா,இன்னும் எத்தனை நாளைக்கு நாம் இந்த விளையாட்டை விளையாடப் போகிறோம்? நான் எழுந்து சென்றதும் என் சூவில் நீங்கள் எச்சல் துப்புவதும் உங்களுக்கு  கோக் வாங்கித் தருகிறேன் என்று கூறிச் சென்று அதில் சிறிது சிறு நீரை நான் கலந்து தருவதும் இன்னும் எத்தனை நாளைக்கு நடக்கும்.?''பாகிஸ்தானியின் முகம் போன போக்கை நீங்களே ஊகித்துக் கொள்ளுங்கள்.
(Times of India நாளிதழில் வந்த நகைச்சுவை)
********

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (3)

இரண்டாவது 'செம'...

சூப்பர் ஜோக்ஸ்.......
பாகிஸ்தானியரின் மேட்டர் செம

nalla irukku....

Post a Comment