உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

முட்டை

1

Posted on : Wednesday, October 24, 2012 | By : ஜெயராஜன் | In :

முட்டை வியாபாரி:என் பையன் எப்படி படிக்கிறான்,சார்?
ஆசிரியர்:நீங்கள் விற்கிறீர்கள்.அவன் வாங்குகிறான்.அவ்வளவுதான்.
********
ராமு:அரையாண்டு தேர்வு எப்படி எழுதி இருக்கே?
சோமு:அரைகுறையாய்த்தான்.
********
தந்தை:ராமு,மணி என்னவென்று பார்த்துச் சொல்லு.
மகன்:எனக்கு மணி. பார்க்கத் தெரியாது அப்பா.
தந்தை:சரி,பெரிய முள்ளும்,சின்ன முள்ளும் எங்க இருக்கு என்று பார்த்துச்சொல்லு .
மகன்:இரண்டும் கடிகாரத்தில் தான் அப்பா இருக்கு.
********
''எலியின் ஆயுட்காலம் எவ்வளவு,தெரியுமா?''
'அது சுற்றி இருக்கும் பூனைகளைப் பொறுத்தது.'
********
ஆசிரியர்:செய்வினைக்கும் செயப்பாட்டு வினைக்கும் என்ன வித்தியாசம்?
மாணவன்:நீங்கள் கொடுக்கும் வீட்டுப் பாடத்தை நானே போட்டால் அது செய்வினை.அதையே எங்க அப்பா செய்து கொடுத்தால் அது செயப்பாட்டு வினை.
********
ராமு:மற்றவர்களுக்குக் கொடுக்க வேண்டும்:தான் வாங்கக் கூடாது என்று நினைப்பவன் யார்?
சோமு:குத்து சண்டை வீரன்.
********
''நாம் எப்போதும் வக்கீல்களிடம் உண்மையே சொல்ல வேண்டும்''
'ஏன் அப்படி?
''பொய் சொல்வதை அவர்கள் பார்த்துக் கொள்வார்கள்.''
********
ராமு:எங்கப்பா ஒரு ஆசிரியர்.ஸ்டாம்ப் சேர்ப்பதுதான் அவரது பொழுதுபோக்கு.
சோமு:எங்கப்பா ஒரு அரசியல்வாதி.காந்தி படம் போட்ட நோட்டுகளை சேகரிப்பதுதான் அவரது பொழுதுபோக்கு.
********
''கல்யாணமும் சூயிங்கமும் ஒரே மாதிரிதான்''
'எனக்குப் புரியலையே.'
''இரண்டும் போகப்போக சுவையே இல்லாமல் ஜவ்வு மாதிரி இழுத்துக்கிட்டே இருக்கும்.''
********
''நம்ம பாகவதர் பாட ஆரம்பித்தாருன்னா உலகத்தையே மறந்து விடுவார்.''
'அதுக்காக பாடிய பாட்டையே மூணாவது தடவை பாடணுமா?'
********

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (1)

அனைத்தும் கலக்கல்...

நன்றி...

Post a Comment