உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

பொன்மொழிகள்-33

3

Posted on : Saturday, October 06, 2012 | By : ஜெயராஜன் | In :

கோபம் என்பது ஒரு விலை மிகுந்த தவிர்க்க முடியாத பொருள்.அந்தப் பொருளை செலவழிக்கும்போது மனிதர்களுக்குக் கிடைக்கும் ஒரே லாபம் மனதிருப்திதான்.
********
பிறர் மகிழ்ச்சியாக இருக்க எப்போது வழி கண்டு பிடித்துக் கொடுக்கிறீர்களோ அப்போது முதலே நீங்கள் இன்பமாக இருக்க ஆரம்பித்து விடுகிறீர்கள்.
********
என் குறைகளைக் கண்டு நானே உள்ளூரச் சிரித்துக் கொள்ளும்போது எனது மனச்சுமை குறைகிறது.
********
உழைப்பு எந்த மனிதனையும் ஏமாற்றுவதில்லை.
மனிதன்தான் உழைப்பை ஏமாற்றுகிறான்.
********
வேலை மனிதனைக் கொல்வது இல்லை.
கவலைதான் மனிதனைக் கொல்லும் .
********
உலகில் மிகச் சிறந்தவை எவை?உப்பின் ருசி,குழந்தையின் அன்பு,உணவின் மணம் .
********
விடைக்கு ஏற்றமாதிரி கேள்வியை மாற்றிக் கொள்ளுங்கள்.சமரசம் என்பது அதுதான்.
********
வாழ்வில்,
தென்னை மாதிரி வளர வேண்டும்:
நாணல் மாதிரி வளைய வேண்டும்.:
வாழை மாதிரி வாரி வழங்க வேண்டும்.
********
மகிழ்ச்சியாக வாழ்வதற்கு முயற்சி செய்வதைக் காட்டிலும்
'மகிழ்ச்சியாக நாங்கள் வாழ்கிறோம்,'என்று பிறர் நம்பும்படி செய்வதற்குத்தான் நம்மில் பலர் அதிக முயற்சி எடுத்துக் கொள்கிறோம்.
********
அறியாமல் இருப்பது தவறு அல்ல:
அறிய முயற்சி செய்யாமலிருப்பதே மாபெரும் தவறு.
********

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (3)

அனைத்தும் அருமை... முக்கியமாக முடிவில் இரண்டும்...

ஒவ்வொரு நாளும் உங்கள் பொன்மொழிகளை நான் பயன்படுத்துகிறேன். நன்றி

good lines.....

Post a Comment