உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

பெனால்டி கார்னர்

1

Posted on : Wednesday, October 31, 2012 | By : ஜெயராஜன் | In :

கால்பந்து போட்டியில் பெனால்டி கார்னர் என்று ஒன்று உண்டு.கோல்  கம்பத்திலிருந்து 11 மீட்டர் தூரத்திலிருந்து பந்தை கோல்  போஸ்ட் நோக்கி உதைக்க வேண்டும்.அந்தப் பந்து கோல்  வலைக்குள் விழாமல் தடுக்க வேண்டியது கோல் கீப்பரின் வேலை.கோல் கீப்பருக்கு பந்து மேலே போகுமா,இடது புறம் போகுமா,வலது புறம் போகுமா என்பதனை முடிவெடுக்க ஒரு வினாடி நேரம் கூட இருக்காது.பந்து வரப்போகும் திசையைத் தீர்மானித்து பாய்ந்து பந்தைத் தடுக்க வேண்டும்.கோல்  விழுந்துவிட்டால் அவர் பாடு அதோ கதிதான்.
நூற்றுக்கணக்கான முக்கியமான போட்டிகளின் பெனால்டி கிக்குகளை ஆய்வு செய்ததில் பெரும்பாலான நேரங்களில் பந்து நேரடியாகத்தான் உதைக்கப் பட்டிருந்தது,தெரிய வந்தது.அந்த மாதிரி நேரங்களில் கோல் கீப்பர் நின்ற இடத்தில் இருந்தே கோல் விழாமல் தடுத்திருக்க முடியும்.ஆனால் 92 சதவிகித கோல் கீப்பர்கள் ஏதோ ஒரு திசையில் பாய்ந்து கோலைக் கோட்டை விட்டிருக்கிறார்கள்.ஏன் இப்படி அவர்கள் பாய்கிறார்கள்?நின்ற இடத்தில் நின்று இடது புறமோ,வலது புறமோ வந்து கோல் விழுந்து விட்டால் அனைவரும் கோல் கீப்பரைத்தான் திட்டுவார்கள்.ஏதோ ஒரு புறம் பாய்ந்து ,கோல் விழுந்தாலும்,''பாவம்,அவன் என்ன செய்வான்?நல்லாத்தான் தாவி முயற்சி செய்தான்''என்று உலகம் உச்சுக் கொட்டும்.
நம் அன்றாட வாழ்விலும் சுற்றி இருப்பவர்கள் என்ன சொல்வார்களோ என்ற பதற்றத்திலும் தயக்கத்திலும் தவறான முடிவை எடுத்து அதை செயல் படுத்தி சொதப்பி விடுகிறோம்.சில சமயங்களில் எதுவும்  செய்யாமல் இருப்பதே நாம் செய்யக் கூடிய சிறந்த செயல் என்பதனை உணர்ந்தாலே பெருமளவு சிக்கல்களிலிருந்து தப்பிக்கலாம்.

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (1)

அதனால்தான் எதுவுமே செய்யாமல் இருந்து, .இப்ப ஏதாவது செய்யணும்னு தோணுது சார். பிளாக் எழுத சொல்லித்தாங்க சார்.
சொதப்பாம பார்த்துக்கிறேன் ..please sir.,
சரவணபவா, சிகாகோ

Post a Comment