உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

சில உண்மைகள்

2

Posted on : Saturday, October 20, 2012 | By : ஜெயராஜன் | In :

கழுத்தை முழு வட்டமாக சுற்றும் தன்மை கொண்ட ஒரே உயிரினம் ஆந்தை தான்.
********
ஒரு நாட்டின் கடல் எல்லை என்பது கடற்கரையிலிருந்து மூன்று கடல் மைல் .அதாவது 6080 அடி தூரமாகும்.
********
எப்போதும் விரியாத பூ அத்தி மலர்தான்.அதனால்தான் எப்போதாவது நடக்கும் செயலை 'அத்தி பூத்தாற்போல'என்கிறோம்.
********
ஒரு அடி எடுத்து வைக்க உடலெங்கும் 54 வகையான தசைகள் பணி  புரிய வேண்டியுள்ளது.
********
'மஞ்சள் புரட்சி'என்பது முட்டை உற்பத்தியைக் குறிக்கிறது.
********
பழச்சாறு சாப்பிட்டால் உடனே வாய் கொப்பளிக்க வேண்டும். இல்லையெனில் பல்லில் எனாமல் வேகமாகத் தேயும்.
********
பளபளப்பான பகுதிகள் வெப்பத்தை மிக மிக தாமதமாகவே கடத்தும். அதனால்தான் இஸ்திரிப் பெட்டிகளின் அடிபாகம் பளபளப்பாக இருக்கிறது.
********
பர்மா ஆங்கிலேயர்களின் ஆட்சியில் இந்தியாவுடன் இணைந்திருந்தது.1937 ல்தான் அது இந்தியாவிலிருந்து பிரிந்தது.
********
பென்சிலில் H.B.என்று எழுதியிருப்பதற்கு HARD BLACK என்பதுதான் விரிவு.
********
யானையின் துதிக்கையில் எலும்பே கிடையாது.
********
ஒட்டகச்சிவிங்கியின் நீளமான கழுத்தில் இருப்பது ஏழே  எலும்புகள்.
********
உலகிலேயே நீண்ட காலம் ஆட்சி செய்த மன்னரின் பெயர் ஈசாகானு
.நாடு-நைஜீரியா.மொத்தம் 72 ஆண்டுகள் ஆட்சி புரிந்தார்.
********

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (2)

சிலது தெரியாதவை...

நன்றி சார்...

nalla thakavalkal!

Post a Comment