உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

ஒத்துழைப்பு இல்லையா?

1

Posted on : Sunday, October 21, 2012 | By : ஜெயராஜன் | In :

ஒரு தொழிலையோ,ஒரு குடும்பத்தையோ,ஒரு அமைப்பையோ,ஏன்,ஒரு சிறு செயலையோ நல்லபடி நடத்திச் செல்ல விரும்பும் ஒருவர் எல்லோருடனும் இணக்கமாகவும் கை கோர்த்து நடக்கும் மன நிலையுடனும் செயல் பட வேண்டியது அவசியம்.நமமிச் சுற்றியுள்ள பலர் இலை மறை காய் மறையாக ஒத்துழையாமை இயக்கம் நடத்துவதற்கு மூன்று பெரிய காரணங்கள் தான் இருக்க முடியும்.
1 இவர்கள் சொற்களால் காயப் பட்டிருப்பார்கள்.அல்லது போதுமான பாராட்டுக்களையோ உரிய அங்கீகாரங்களையோ பெறாமலிருப்பார்கள்.
2 இவர்களது தேவைகள் சரிவர பூர்த்தி செய்யப்படாமல் இருக்கும்.அதாவது இவர்களிடம் அதிருப்தி உள்ளது.
3இவர்கள்  பல்வேறு சம்பவங்களினால் நம்மீது எரிச்சல் அடைந்து இனம் புரியாத வெறுப்பைத் தங்கள் மனதிற்குள் வளர்த்திருப்பார்கள்.
முதல் பிரிவினர் அன்பு,பாசம்,மரியாதை,பாராட்டு இவற்றால் அடங்கி விடுவார்கள்.பணத்தையோ,பரிசையோ பெரிதாக எண்ண  மாட்டார்கள். இவர்கள் விசயத்தில் நாம் கௌரவம் பார்க்கக் கூடாது.
இரண்டாவது பிரிவினர் கொஞ்சம் பேராசைக்காரர்கள்.கேட்டதெல்லாம் இவர்களுக்குக் கிடைத்து விட வேண்டும்.இவர்கள் விசயத்தில் நாம் கொஞ்சம் விட்டுக் கொடுக்கவும் இழக்கவும் தயாராக இருந்தால் வழிக்கு வந்து விடுவார்கள்.
மூன்றாவது ரகத்தினர் நம் மீது குறை காணுபவர்கள்.இவர்கள் நம் செயல் தவறு என்று கூறும்போது ஆமாம் என்று ஒத்துக் கொண்டு மறுபடியும் அந்தமாதிரி வராதவாறு பார்த்துக் கொள்ளவேண்டும்.
------------லேனா தமிழ்வாணன்.

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (1)

பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி...

Post a Comment