உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

மௌனம்

1

Posted on : Saturday, October 27, 2012 | By : ஜெயராஜன் | In :

முட்டாளின் மேலான ஞானம் மௌனம்.
அறிஞனின் பெரிய சோதனை பேச்சு.
********
மௌனம் நூறு தடைகளை வென்றுவிடும்.
********
பேச்சினால் பின்னர் வருந்த நேர்கிறது.
மௌனத்தால் அப்படி நேர்வதில்லை.
********
உண்மையான மௌனம் உள்ளத்திற்கு ஓய்வளிக்கும்.
********
மௌனமாயிருந்து மூடனாகக் கருதப்படுவது,சந்தேகமில்லாமல் ,பேசி மூடன் என்று காட்டிக் கொள்வதைவிட மேலானது,
********
நீ அமைதியாக வாழ விரும்பினால்,கேள்;பார்;அனால் மௌனமாயிரு .
********
மௌனமாக இருக்கத் தெரியாதவனுக்கு நன்றாகப் பேசவும் தெரியாது.
********
மௌனம் என்ற மரத்தில் அமைதி என்னும் கனி தொங்குகிறது.
********
உன்னைப் பற்றி மற்றவர்கள் பெருமையாக எண்ண  வேண்டுமானால் மௌனமாயிருக்க வேண்டும்.
********
மௌனம் என்பது சிந்தனையின் கூடு.
********
மூடிய வாயின் இசை இனியது.
********
ஒருவனுடைய வாய்ப் பேச்சைவிட அவனது மௌனம் அதிகமாக எண்ணங்களைப் பிரதிபலிக்கும்.
********

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (1)

உண்மை... அனைத்தும் உண்மை...

நன்றி...

Post a Comment