உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

பொன் மொழிகள்-32

1

Posted on : Friday, October 05, 2012 | By : ஜெயராஜன் | In :

இளமையாக இருக்கும்போது ரோஜா மலர்கள் மீது படுத்தால்
முதுமையான காலத்தில் முட்கள் மீது படுக்க நேரிடும்.
இளமையில் தனது தோலை  கடினமாக்கிக் கொண்டவனுக்கு
முதுமையில் முட்கள் குத்தினாலும் வலிக்காது.
********
இசையைக் கேட்டுக் கொண்டே இரவு உணவை உண்பது,உணவை சமைத்த சமையல் காரனையும் ,இசையை இசைத்த கலைஞனையும் அவமானப் படுத்துவதாகும்.
********
சில விவாதங்களுக்கு இரண்டு பக்கங்கள் உண்டு.ஆனால் முடிவு என்ற ஒன்று இருப்பதில்லை.
********
பணிவு ஒருபோதும் பலவீனம் அல்ல.உங்கள் பலத்தைக் காட்ட நினைப்பதுதான் பலவீனம்.
********
உங்கள் முகத்தில் புன்னகையின் ஒளிக்கீற்று இல்லையென்றால் நீங்கள் முழுமையாக உடை உடுத்தியவர் ஆக மாட்டீர்கள்.
********
வாழ்க்கையில் கடினமான மூன்று விஷயங்கள்:
*ஒரு  ரகசியத்தை பாதுகாப்பது.
**மனதில் ஏற்பட்ட ஒரு வலியை மறப்பது.
***ஓய்வு நேரத்தை பலனுள்ளதாகச் செய்வது.
********
ஆயிரம் தெய்வங்களின் மீது நம்பிக்கை வைத்துவிட்டு,உன் மீது நம்பிக்கை வைக்காமல் போனால் உன்னை விடப் பெரிய நாத்திகன் உலகில் யாரும் இல்லை.
********
நான் வசிப்பது ரொம்ப சிறிய சாதாரண வீடுதான்.ஆனால் என் வீட்டு ஜன்னல் வழியாக பரந்து விரிந்த உலகம் தெரிகின்றதே!
  ********
வெற்றியைக் கொண்டாடும்போது தோற்றவர்களைப் பற்றி நாம் கவலைப் படுவதில்லை.அங்கே நாம் வெற்றியின் மூலம் அசிங்கமாகிப் போகிறோம்.
********
பொறாமை ஏற்படுத்துகிற ஞாபகங்களைவிட அது நம் கண்களில் இருந்து மறைக்கும் உண்மைகள் அதிகம்.
********
மகிழ்ச்சி என்பது பிரச்சினைகளே இல்லாத நிலையில் இல்லை: பிரச்சினைகளை எப்படிக் கையாளுகிறோம் என்பதில்தான் இருக்கிறது.
********

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (1)

சிறப்பான பொன்மொழிகள்... சேமித்துக் கொள்ள வேண்டியவை...

Post a Comment