உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

வருத்தமில்லாமல் வாழ!

1

Posted on : Friday, October 19, 2012 | By : ஜெயராஜன் | In :

வருத்தப்படுவது உங்கள் குணமா?கவலையை விடுங்கள்.உங்களின்  அனுபவங்களைக் கொண்டே உங்கள் வருத்தங்களை நீக்கி விடலாம் . வருத்தப்படுவது என்பது உணர்ச்சி வசப்படுதலின் விளைவாக ஏற்படுவது.ஆகவே எந்த சந்தர்ப்பத்திலும் நிதானத்தைக் கடைப் பிடியுங்கள். எதிர் காலத்தைப் பற்றி அடிக்கடி குழம்பாதீர்கள்.அதற்குப் பதிலாக ரொம்ப சகஜமாகவும்,சிரமமற்றதாகவும் வாழ்க்கையைத் திட்டமிட வேண்டும். குழப்பமான வேலைகள் வந்தால் அதை சற்றே ஒதுக்கி வையுங்கள்.எந்த வேலையையும் ஆர்வமுடன் செய்யும்போது மகிழ்ச்சி ஏற்படும். அம்மகிழ்ச்சியே உங்களை மேலும் சாதனை புரியத் தூண்டும்.வருத்தமான ஒரு நிலை உங்கள் முன்னே உருவாகிறபோது அதைப் பற்றி யோசியுங்கள். ஆராயுங்கள்.காரணம் தெரிந்தவுடன் அதை எப்படி தவிர்ப்பது என்று சிந்தியுங்கள்.அப்போதே பாதி வருத்தம் போய்விடும்.''நான் வருத்தப்படுவதால்  எதிர்காலத்தில் ஏதாவது லாபம் ஏற்படுமா,மாற்றங்கள் உண்டாக வாய்ப்பு உண்டா'' என நினைத்துப் பாருங்கள்.வருத்தம் ஏற்படுவது தவிர்க்க முடியாத சூழ்நிலைகளில் வருத்தப்படும் நேரத்தைக் குறைத்துக் கொள்ளுங்கள். மனதில் உள்ள வருத்தத்தைத் தூக்கி எறிந்துவிட்டு நிம்மதியாக அடுத்த வேலையைக் கவனியுங்கள்.

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (1)

நல்ல யோசனைகள்...

நன்றி...

Post a Comment