உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

நகைமுகம்

1

Posted on : Saturday, October 13, 2012 | By : ஜெயராஜன் | In :

ராமு:ஒரு ஆயிரம் ரூபாய் தாயேன்!
சோமு:இல்லையே!
ராமு:ஐநூறு ரூபாயாவது!
சோமு:வாய்ப்பே இல்லை.
ராமு:சரி,இருநூறாவது கொடு.
சோமு:நாந்தான் இல்லை என்று சொல்கிறேனே,ஏன் தொந்தரவு செய்கிறாய்?
ராமு:போனால் போகிறது.நூறு ரூபாயாவது கொடு.
சோமு:நான் என்ன வச்சிக்கிட்டா வஞ்சகம் பண்றேன்?
ராமு:இப்போதைக்கு ஐம்பது ரூபாய் தந்தால்  கூடப் போதும்.
சோமு:ஊகூம்.
ராமு:கடைசியாக் கேட்கிறேன்.திரும்பப் போக பஸ் செலவுக்கு பத்து ரூபாயாவது  தா.
சோமு:என்கிட்டே பத்து பைசா கூட இல்லை.ஆளைவிடு.
ராமு:ஏண்டா,என்னதான் நினைச்சுக்கிட்டிருக்கே?உன் கிட்ட கொடுத்த கடனைக் கேட்டா,நீ என்னவோ,நான் உன்கிட்ட கடன் பட்டது போல நடந்துக்கிறாயே!
********
நடத்துனர்:டிக்கட்,டிக்கட்,...நீங்க டிக்கட் வாங்கிட்டீங்களா?
பயணி:பின்னால மீசை வைச்சவரு இருக்காரு பாருங்க.அவர் வாங்குவார்.
நடத்துனர்:இது என்னய்யா உலக அதிசயம்!.அது யாரையா,பின்னால மீசை வச்சிருப்பது?அவரைப் பார்க்கணுமே!
********
ராமு:எனக்கு ஜலதோஷம் பிடிச்சுருக்குடா!
சோமு:(ஏதோ கவனத்தில்) பிடிச்சிருந்தா வச்சுக்கோயேன்!
********
ராமு:டேய் ,பெரியவர் எதிரில் உட்கார்ந்து சிகரெட் பிடிக்காதே!
சோமு:பெரியவர் என்ன பெட்ரோல் பங்க்கா ,நான் சிகரெட் பிடித்தால் பற்றி எரிய?
********
தாய்:'குழந்தைகளை வளர்ப்பது எப்படி?'என்ற புத்தகத்தை எடுத்து ஏண்டா நீ படிச்சுக் கிட்டிருக்கே?
மகன்:நீ என்னை சரியாத்தான் வளர்க்கிறாயா என்று தெரிந்து கொள்ளத்தான்.
********
ராமு:தினம் நீ எவ்வளவு தூரம் ஓடுவே?
சோமு:அது துரத்தி வர்ற கடன்காரன்களைப் பொறுத்தது.
******

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (1)

ஹா... ஹா... கலக்கல்...

நன்றி...

Post a Comment