உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

சிரித்தால் தப்பில்லை

0

Posted on : Friday, September 02, 2011 | By : ஜெயராஜன் | In :

தந்தை கேட்டார்,''மகனே ,தேர்வில் என்ன மதிப்பெண் பெற்றுள்ளாய்?''மகன் சொன்னான்,''நூறு மார்க் அப்பா,''தந்தைக்கு மகிழ்ச்சி.''எந்தப் பாடத்தில் நூறு மார்க் எடுத்துள்ளாய்?''மகன் சொன்னான்,''ஐந்து பாடத்திலும் சேர்த்து.''
**********
''நேற்று இரவு நான் இல்லாதபோது என் வீட்டிற்கு ஒரு திருடன் வந்துவிட்டான்.என் மனைவி அவனை அடித்து நொறுக்கி விட்டாள். அவன் அலறி அடித்து ஓடி விட்டான்.''என்றான் ஒருவன் தன நண்பனிடம்.நண்பன் சொன்னான்,''பரவாயில்லை..உன் மனைவி தைரியம் மிக்கவர் போலும்,''  அவன் நண்பனின் காதருகே வந்து மெதுவாக சொன்னான்,''அப்படி இல்லை.அவள் பயந்தவள்தான்.ஆனால் இருட்டில் நான்தான் தாமதமாக வந்துள்ளேன் என்று நினைத்து விட்டாள்.''
**********
இரவு நேரத்தில் சற்று மங்கலான வெளிச்சத்தில் ஒருவன் சென்று கொண்டிருந்தபோது எதிரே இரண்டு குண்டர்கள் வருவதைப் பார்த்தவுடன் அவனுக்கு சற்று பயம் ஏற்பட்டது.அதில் ஒருவன் அவனிடம்,'சார்,ஒரு ஒருரூபாய் நாணயம் இருக்குமா?''என்று கேட்டான்.தலைக்கு வந்தது தலைப்பாகையுடன் போகுதே என்று எண்ணி ஆறுதலுடன், அதைக் கொடுத்தபோது அதை அவன்  சுண்டிவிட்டான்.''எதற்காக சுண்டுகிறீர்கள்?"என்று கேட்க அந்த குண்டன் சொன்னான்,''எங்கள் இருவரில் யார் உன் கடிகாரத்தை எடுத்துக் கொள்வது,பர்சை யார் எடுத்துக் கொள்வது என்று முடிவு செய்வதற்காகத்தான்.''
**********
''இன்று நடந்த பார்ட்டியில் சோமுவின் மனைவியை ஏன் முத்தம் இட்டீர்கள்?''என்று கணவனிடம் மனைவி கோபமாகக் கேட்டாள்.கணவன் சொன்னான்,''அவள் உன் தோழி உமாவிடம் உன்னைப் பற்றித் தவறாகப் பேசிக் கொண்டிருந்தாள்.அவள் வாயை அடைக்க எனக்கு வேறு வழி தெரியவில்லை.''
***********
ஒரு புரோகிதர் வீட்டு வாசலில் ஒரு கழுதை இறந்து கிடந்தது.அவர் நகராட்சி அலுவலகத்துக்கு போன் செய்து அதை அப்புறப்படுத்தக் கேட்டுக் கொண்டார்.அதற்கு அந்த ஆள் குறும்பாக,''புரோகிதரே,இறந்த அந்த கழுதைக்கு இறுதிச் சடங்குகளை முதலில் முடியுங்கள்,''என்றார்.புரோகிதரும்,''அதற்கென்ன,பேஷாகச் செய்து விடுகிறேன்.இருந்தாலும் அந்தக் கழுதையோட உறவினர்களுக்கு முதலில் சொல்ல வேண்டும் இல்லையா?அதுதான் உங்களிடம் சொன்னேன்.''என்றார்.
**********

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (0)

Post a Comment