உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

குரு வணக்கம்

0

Posted on : Monday, September 05, 2011 | By : ஜெயராஜன் | In :

அக்பர் அவையில் புகழ் பெற்ற பாடகர் தான்சேன்.அவர் சிறு பிள்ளையாக இருக்கும்போது அவர்கள் வீட்டுத் தோட்டத்தில் காய்த்த பழங்களை சாலையில் செல்பவர்கள் பறித்தது போக அவர்களுக்கு பயன் கிடைக்காத நிலை இருந்தது.தோட்டத்திற்கு காவலாக இருக்கும்படி தான்சேனை அவன் தந்தை அனுப்பினார்.சிறுவனாக இருந்தபோதும் தான்சேன் ஒரு  யுக்தி செய்தான்.அவன் தோட்டத்தில் செடி மறைவில் ஒளிந்து கொண்டு ஆண் புலியைப் போல உறுமினான்.அக்குரல் தத்ரூபமாக இருந்ததால் தோட்டத்தில் புலி இருக்கிறது என்று பயந்து நாளடைவில் யாருமே அந்தப்பக்கம் வருவதே இல்லை.ஒரு நாள் இரண்டு சாதுக்கள் அவ்வழியே வந்தனர்.அவர்களைக் கண்ட தான்சேன் புலியைப் போல உறுமினான்.ஒரு சாது ஓடிவிட்டார்.ஹரிதாஸ் எனும் சாது மட்டும் தைரியமாகத் தோட்டத்திற்குள் நுழைந்து பார்த்தார்.தான்சேன் செடி மறைவில் இருப்பதைக் கண்டார்.அவருக்கு தான்சேன் திறமையில் அபாரப் பற்று ஏற்பட்டது.எனவே தனக்குத் தெரிந்த இசைக்கலையை அவனுக்கு அன்று முதல் புகட்ட ஆரம்பித்தார்.அவன் ஒப்பற்ற இசை மேதை ஆகி விட்டான்.ஒரு கதையாய்ப் போய்விட்ட பிறகும் கூட தான்சேன் பாட ஆரம்பிக்கும்போது புலியைப்போல உறுமாமல் துவங்குவது இல்லை.அந்த உறுமலே தான்சேனின் குரு வணக்கம்.
                       ந.பிச்சமூர்த்தி கதைகள் எனும் நூலிலிருந்து.

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (0)

Post a Comment