உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

நம் விருப்பம்.

1

Posted on : Thursday, September 08, 2011 | By : ஜெயராஜன் | In :

நாம் பொய்யை விரும்புகிறோம்.எதையும் நேரிடையாக உள்ளபடி பேசுவதைவிட கொஞ்சம் நம் சரக்கை  சேர்த்து சொல்கிறோம்.ஏன்?ஜென் ஞானி சொல்கிறார்:
''மற்றவரைவிட அதிகம் தெரிந்திருப்பவன் நான் என்று இலைமறை காய்மறையாகக் காண்பித்துக் கொள்ள நினைக்கும் மனத்துடிப்பே காரணம்.''
ஆழ்ந்து பார்த்தால புரியும்.ஒவ்வொரு முறை பொய் சொல்லும்போதும் நமது அகங்காரம் திருப்தி அடைகிறது மனம் புஷ்டியாகிறது.இது ஆரோக்கியக் கேடு அல்ல;ஆனந்தக்கேடு.மற்றவர்களின் அறியாமையை பயன்படுத்தி அவர்களை எளிதில் ஏமாற்றும் மாபெரும் தனிக்கலையாக திரித்துப் பேசுதல் உருவாகியுள்ளது.இதை நாம் மற்றவர்களுக்கும் மற்றவர்கள் நமக்கும் செய்து கொண்டேயிருக்கிறோம்.

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (1)

பொய் பற்றிய மெய் ...

Post a Comment