நாம் பொய்யை விரும்புகிறோம்.எதையும் நேரிடையாக உள்ளபடி பேசுவதைவிட கொஞ்சம் நம் சரக்கை சேர்த்து சொல்கிறோம்.ஏன்?ஜென் ஞானி சொல்கிறார்:
''மற்றவரைவிட அதிகம் தெரிந்திருப்பவன் நான் என்று இலைமறை காய்மறையாகக் காண்பித்துக் கொள்ள நினைக்கும் மனத்துடிப்பே காரணம்.''
ஆழ்ந்து பார்த்தால புரியும்.ஒவ்வொரு முறை பொய் சொல்லும்போதும் நமது அகங்காரம் திருப்தி அடைகிறது மனம் புஷ்டியாகிறது.இது ஆரோக்கியக் கேடு அல்ல;ஆனந்தக்கேடு.மற்றவர்களின் அறியாமையை பயன்படுத்தி அவர்களை எளிதில் ஏமாற்றும் மாபெரும் தனிக்கலையாக திரித்துப் பேசுதல் உருவாகியுள்ளது.இதை நாம் மற்றவர்களுக்கும் மற்றவர்கள் நமக்கும் செய்து கொண்டேயிருக்கிறோம்.
|
|
பொய் பற்றிய மெய் ...