சந்தையில் ஒருவன் மருந்து விற்றுக் கொண்டிருந்தான்.முல்லா அவன் உதவியாளராக இருந்தார்.வியாபாரி சப்தம் போட்டுக் கூவினான்,''இந்த மருந்து சாதாரண மருந்து அல்ல.இது சிரஞ்சீவி மருந்தாகும்.இதை சாப்பிடுபவர்கள் நீண்ட காலம் வாழலாம்.''கூட்டம் கூடியது.அவர்களுக்கு வியாபாரியின் கூற்றில் நம்பிக்கை ஏற்படவில்லை.அதைக் கவனித்த வியாபாரி,''உங்களுக்கு நம்பிக்கை இல்லையா?என்னைப் பாருங்கள்.நான் தினமும் இதை சாப்பிட்டு வருகிறேன்.எனக்கு இப்போது வயது முன்னூறு.'' யாருக்கும் இன்னும் நம்பிக்கை வரவில்லை.ஒருவன் அருகிலிருந்த முல்லாவிடம் கேட்டான்,''ஏனப்பா,இவர் சொல்வது உண்மையா?'' முல்லாவின் நிலை தர்ம சங்கடம் ஆனது.இருந்தாலும் சமாளித்துக் கொண்டு சொன்னார்,''எனக்கு அவர் வயது சரியாகத் தெரியாது.ஏனென்றால் நான் அவரிடம் இருநூறு ஆண்டுகளாகத்தான் பணி புரிகிறேன்.''
|
|
Post a Comment