உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

சிரஞ்சீவி

0

Posted on : Monday, September 05, 2011 | By : ஜெயராஜன் | In :

சந்தையில் ஒருவன் மருந்து விற்றுக் கொண்டிருந்தான்.முல்லா அவன் உதவியாளராக இருந்தார்.வியாபாரி சப்தம் போட்டுக் கூவினான்,''இந்த மருந்து  சாதாரண மருந்து அல்ல.இது சிரஞ்சீவி மருந்தாகும்.இதை சாப்பிடுபவர்கள் நீண்ட காலம் வாழலாம்.''கூட்டம் கூடியது.அவர்களுக்கு வியாபாரியின் கூற்றில் நம்பிக்கை ஏற்படவில்லை.அதைக் கவனித்த வியாபாரி,''உங்களுக்கு நம்பிக்கை இல்லையா?என்னைப் பாருங்கள்.நான் தினமும் இதை சாப்பிட்டு வருகிறேன்.எனக்கு இப்போது வயது முன்னூறு.'' யாருக்கும் இன்னும் நம்பிக்கை வரவில்லை.ஒருவன் அருகிலிருந்த முல்லாவிடம் கேட்டான்,''ஏனப்பா,இவர் சொல்வது உண்மையா?'' முல்லாவின் நிலை தர்ம சங்கடம் ஆனது.இருந்தாலும் சமாளித்துக் கொண்டு சொன்னார்,''எனக்கு அவர் வயது சரியாகத் தெரியாது.ஏனென்றால்  நான் அவரிடம் இருநூறு ஆண்டுகளாகத்தான் பணி புரிகிறேன்.''

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (0)

Post a Comment