உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

குடை ராட்டினம்

0

Posted on : Tuesday, September 06, 2011 | By : ஜெயராஜன் | In :

ஒருவர் தன இரண்டு குழந்தைகளைக் கூட்டிக் கொண்டு பொருட்காட்சிக்கு சென்றார்.அங்கு ஒரு குடைராட்டினம் இருந்தது.அவருடைய நண்பர், முல்லா குடை ராட்டினத்தில் சுற்றிக் கொண்டிருப்பதைப் பார்த்தார்.அவருக்கு ஆச்சரியம்.இந்த வயதில் அவர் இப்படி உல்லாசமாக சுற்றுகிறாரே !சிறிது நேரத்தில் அவருக்கு திகைப்பே ஏற்பட்டுவிட்டது.ராட்டினம் நின்றவுடன் முல்லா கீழே இறங்கினார்.வேகமாய்ப்  போய் மறுபடியும் ஒரு டிக்கெட் எடுத்தார் மீண்டும் ராட்டினத்தில் ஏறி உட்கார்ந்தார்.இதுபோல திரும்பத் திரும்ப செய்து கொண்டிருந்தார்.கடைசியில் அவர் இறங்கி வந்தபோது  நண்பர் கேட்டார்,''முல்லா,ராட்டினத்தில் சுற்றுவதென்றால் உங்களுக்கு அவ்வளவு விருப்பமா?''அதற்கு முல்லா சொன்னார்,'ஐயோ.எனக்கு ராட்டினமே சுத்தமாகப் பிடிக்காது.அதில் ஏறினாலே தலை சுற்றும்.'' நண்பர் கேட்டார்,''அப்படியானால் ஏன் மீண்டும் மீண்டும் ராட்டினத்தில் சுற்றினீர்?'' முல்லா சொன்னார்,''அதை ஏன் கேட்கிறீர்கள்?இந்த ராட்டினத்துக்காரன் எனக்கு பணம் கடன் தர வேண்டியிருக்கிறது.பல முறை கேட்டும் தரவில்லை.ராட்டினத்தில் சுற்றியாவது கடனை வசூலித்ததாக இருக்கட்டும் என்று தான் சுற்றினேன்.''

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (0)

Post a Comment