உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

இறந்தவன்

0

Posted on : Saturday, September 03, 2011 | By : ஜெயராஜன் | In :

மன நோயுற்ற ஒருவன் மனோதத்துவ மருத்துவரிடம் அழைத்து  வரப்பட்டான்.அவன் பிரச்சினை என்னவென்று கேட்க அவன் தந்தை சொன்னார்,''அவன் தான் இறந்து விட்டதாகக் கூறிக் கொண்டிருக்கிறான்.எங்காவது வெளியே போகச் சொன்னால் இறந்தவன் எப்படி வெளியே செல்ல முடியும் என்று கேட்கிறான்.என்ன சொல்லி சமாதானப் படுத்தினாலும்  அதை ஏற்க மறுக்கிறான்.அதனால் தான் உங்களிடம் அழைத்து வந்தோம்.''மருத்துவரும்,''இது ஒன்றும் பெரிய விசயமில்லை அவனை எளிதில்  நான் சரி செய்து விடுவேன்,''என்றார்.பின் அவர் அவனிடம்திருபி கேட்டார்,''இறந்த மனிதனுக்கு உடலிலிருந்து  இரத்தம் வருமா?''அவன் சொன்னான்,'வராது,'மருத்துவரும் ஒரு கத்தியை எடுத்து அவன் உடலில் இலேசாகக்கீற இரத்தம் பீறிட்டது.அவன் குடும்பத்தினர் மிக்க மகிழ்ச்சி அடைந்தனர்.மருத்துவர்,''பார்த்தாயா,உன் உடலிலிருந்து இரத்தம் வருகிறது.எனவே நீ இறக்கவில்லை.புரிகிறதா?''என்று கேட்டார்.அவன் மிக அமைதியாக சொன்னான்,''இதுவரை நான் இறந்தவர்கள் உடலிலிருந்து இரத்தம் வராது என்று நம்பி வந்தேன்.இப்போதுதான் தெரிந்து கொண்டேன்,இறந்தவர் உடலிலிருந்தும் இரத்தம் வரும்.''மருத்துவர் மயங்கி விட்டார்.

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (0)

Post a Comment