உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

டீன் ஏஜ் பிரச்சினை

0

Posted on : Friday, September 16, 2011 | By : ஜெயராஜன் | In :

டீன் ஏஜ் என்பது கனவுகள் மலரும் பருவம்.பெற்றோருக்கோ சிம்ம சொப்பனமான காலம்.டீன் ஏஜ் சுதந்திரத்தை நாடும் பருவம்.அதே சமயம் எதிர் காலம் பற்றிய உறுதியான நம்பிக்கை தோன்றாத பருவம்.இப்பருவத்தில் எதிர்காலத்தைப் பற்றி பயமுறுத்தும் விதமாகப் பேசினால் அவர்களுக்கு எதிர் மறையான சிந்தனைகள்தான் வளரும்.அவர்களிடம்,'உன் மகிழ்ச்சிதான் என் மகிழ்ச்சி,'என்ற ரீதியில் பேச வேண்டும்.குத்தலாகப் பேசாது அன்பை முழுமையாக வெளிப்படுத்துங்கள் .இப்பருவத்தின் உணர்ச்சி ,சிந்தனை , தேவை  மூன்றும் வித்தியாசமானது தான்.இவ்வளவு காலமாக இந்த மூன்றிலும் பெற்றோரின் பிம்பமாக இருந்த குழந்தைகள்,சுதந்திர இளைஞர்களாகவும் ,யுவதிகளாகவும் மலர ஆரம்பிக்கிறார்கள்.செலவுக்குப் பெற்றோரை சார்ந்தும்,முடிவுகள் எடுக்க மட்டும் அவர்களைச் சாராமல் இருக்க நேருகிறது.இந்த முரண்பாடு மன சஞ்சலங்களை தோற்றுவிக்கிறது. பெற்றோர் இக்கட்டத்தில் கட்டுப்பாடுகளை  அதிகரிக்க விரும்புகின்றனர் .''நான் தானே இவ்வளவு துன்பப்பட்டு வளர்த்தேன்,நான் சொல்வதைக் கேட்கக் கூடாதா?''என்று அப்பாவும் அம்மாவும் நினைக்க ஆரம்பிக்கின்றனர்.அன்பு எல்லைகளைக் கடந்து ஆக்கிரமிப்பாக மாறுகிறது. போராட்டங்களும் வாக்குவாதங்களும் வலுவான மனக் காயங்களை ஏற்படுத்தி பல சமயங்களில் நிரந்தரமான வடுக்ககளை விட்டுச் செல்கின்றன.வாக்குவாதங்களை உணர்ச்சி வசப்பட்டு வளர்க்காமல் அறிவு பூர்வமாக அணுகி அணை போடுவது மட்டுமே இப்பிரச்சினைக்குத் தீர்வு. தனிமையை நாடுவதும் ,மற்றவர்களிடமிருந்து தன்னை வேறுபடுத்தி உடுத்திக் கொள்வதும் இந்தப் பருவத்திற்கே உரிய குணங்கள்.இதைப் பார்க்கும் பெற்றோருக்குக் கவலையும் கோபமும் வந்தாலும் பொறுமை காக்க வேண்டும் .கிண்டல் ,கேலி,குத்தல் வார்த்தைகள் அவர்களுக்கு வேதனையாகி தொடர்ந்து வேறுபட்டே நிற்கச் செய்யும்.மாற்றங்களைக் கவனித்தாலும் உங்களுக்குப் பிடிக்கவில்லை என்ற கருத்தை கோபத்தைக் காட்டாது சொல்லுங்கள் .அவர்களுடைய தனிப்பட்ட ரசனைகளை உணர்வுகளைப் புரிந்து மதிப்பதாகக் காட்டிக் கொள்ளுங்கள்.அவர்களுக்கு உங்களிடம் மதிப்பு அதிகரிக்கும்.பெற்றோரைப் பொறுத்தவரை தங்கள் பிடிகளைத் தளர்த்த வேண்டிய காலம் இது.உங்கள் குழந்தையை தனி மனிதனாக ஏற்றுக் கொள்ளுங்கள்.அதற்கு உங்களை நீங்களே தயார் செய்து கொள்ள வேண்டும்.
*அவர்களின் எதிர்காலக் கனவுகளை நீங்கள் நிர்ணயிக்காதீர்கள் ..அவர்களுடைய கனவுகளைப் புரிந்து யோசனைகள்  சொல்லுங்கள்.
*அன்பைப் பொழியுங்கள்.
*உணர்ச்சிகளை மறைக்காமல் மிதமாக வெளிப் படுத்துங்கள்.
*உணர்ச்சி வசப்பட்டுக் கடும் வார்த்தைகளை வீசாதீர்கள்.
*நட்போடு எடுத்துச் சொல்லுங்கள்.
*முடிவுகளைத் திணிக்காதீர்கள்.
*உங்கள் குழந்தைகளை அவர்களின் குறை நிறைகளுடன்  முழுமையாய் ஏற்றுக் கொள்ளுங்கள்.

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (0)

Post a Comment