உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

வானர சேனை

0

Posted on : Saturday, September 10, 2011 | By : ஜெயராஜன் | In :

வால்மீகி ராமாயணத்தில் ஒரு காட்சி;
இராவணன் தன இரு ஒற்றர்களுடன் தன்னுடைய அரண்மனையின் உச்சியிலுள்ள மாடியில் ஏறி பகைவர்களின் சைன்யத்தை பார்வை இட்டார்.அந்த ஒற்றன் வானர சேனையின் முக்கியமானவர்களைப் பற்றி விவரித்துவிட்டு வானர சேனையின் எண்ணிக்கையை கூறுகிறான்.
நூறு ஆயிரம் கொண்டது ஒரு லட்சம்.
நூறு லட்சங்கள் கொண்டது ஒரு கோடி.
லட்சம் கோடிகள் கொண்டது ஒரு சங்கம்.
லட்சம் சங்கங்கள் கொண்டது ஒரு பிருந்தம்.
லட்சம் பிருந்தங்கள் கொண்டது ஒரு பத்மம்.
லட்சம் பத்மங்கள் கொண்டது ஒரு மகாபத்மம்.
லட்சம் மகாபத்மங்கள் கொண்டது ஒரு கர்வம்.
லட்சம் கர்வங்கள் கொண்டது ஒரு மகாகர்வம்.
லட்சம் மகாகர்வங்கள் கொண்டது ஒரு சமுத்திரம்.
லட்சம் சமுத்திரங்கள் கொண்டது ஒரு ஓகம்.
லட்சம் ஓகம் கொண்டது ஒரு மகா ஓகம்.
வானர சேனைகள் நூறு கோடி மகா ஓகம் கொண்டதாக இருப்பதாக ஒற்றன் கூறுகிறான்.அதாவது வானர சேனையில் இருந்தவர்களின் எண்ணிக்கை ஒன்று போட்டு அதன்பின் 61 பூஜ்யங்கள் போட்டால் வரும் எண்ணிக்கையில் இருப்பதாகக் கூறுகிறான்.
இவ்வளவு வானரங்கள் நிற்கவாவது பூமியில் இடம் இருக்குமா?இதைக் கற்றறிந்தோர் யாராவது தெளிவு படுத்தினால் நன்றியுடையவனாக இருப்பேன்.

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (0)

Post a Comment