வால்மீகி ராமாயணத்தில் ஒரு காட்சி;
இராவணன் தன இரு ஒற்றர்களுடன் தன்னுடைய அரண்மனையின் உச்சியிலுள்ள மாடியில் ஏறி பகைவர்களின் சைன்யத்தை பார்வை இட்டார்.அந்த ஒற்றன் வானர சேனையின் முக்கியமானவர்களைப் பற்றி விவரித்துவிட்டு வானர சேனையின் எண்ணிக்கையை கூறுகிறான்.
நூறு ஆயிரம் கொண்டது ஒரு லட்சம்.
நூறு லட்சங்கள் கொண்டது ஒரு கோடி.
லட்சம் கோடிகள் கொண்டது ஒரு சங்கம்.
லட்சம் சங்கங்கள் கொண்டது ஒரு பிருந்தம்.
லட்சம் பிருந்தங்கள் கொண்டது ஒரு பத்மம்.
லட்சம் பத்மங்கள் கொண்டது ஒரு மகாபத்மம்.
லட்சம் மகாபத்மங்கள் கொண்டது ஒரு கர்வம்.
லட்சம் கர்வங்கள் கொண்டது ஒரு மகாகர்வம்.
லட்சம் மகாகர்வங்கள் கொண்டது ஒரு சமுத்திரம்.
லட்சம் சமுத்திரங்கள் கொண்டது ஒரு ஓகம்.
லட்சம் ஓகம் கொண்டது ஒரு மகா ஓகம்.
வானர சேனைகள் நூறு கோடி மகா ஓகம் கொண்டதாக இருப்பதாக ஒற்றன் கூறுகிறான்.அதாவது வானர சேனையில் இருந்தவர்களின் எண்ணிக்கை ஒன்று போட்டு அதன்பின் 61 பூஜ்யங்கள் போட்டால் வரும் எண்ணிக்கையில் இருப்பதாகக் கூறுகிறான்.
இவ்வளவு வானரங்கள் நிற்கவாவது பூமியில் இடம் இருக்குமா?இதைக் கற்றறிந்தோர் யாராவது தெளிவு படுத்தினால் நன்றியுடையவனாக இருப்பேன்.
|
|
Post a Comment