உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

உமக்குள் இல்லையா?

0

Posted on : Thursday, September 15, 2011 | By : ஜெயராஜன் | In :

சிலர் தமது பல்வலி,வயிற்று வலிகளையும்,வியாபார இழப்புகளையும், சண்டை சச்சரவு,பழிவாங்கல்களையும்,உறக்கமற்ற இரவுகளையும் -புதைப்பதற்கான ஒரு குழியாகவே கடவுளைக் கருதியிருக்கிறார்கள். மற்றவர்கள் கடவுளைத் தங்கள் செல்வங்களின் கருவூலமாக கருதுகிறார்கள்.மற்றும் சிலர் கடவுளை ஒரு கணக்குப் பிள்ளையாகக் கருதுகிறார்கள்.கடவுளுக்கு ஏகப்பட்ட வேலைகள் இருப்பதாகப் பலர் கருதுகிறார்கள்.இருந்தாலும்,அவர் அதைத் தனியே செய்து கொள்வார்.யாரும் நினைவு படுத்த வேண்டியதில்லை என்பதை சிலரே அறிவர்.கதிரவனின் உதயம்,மறைவு நேரங்களை நீங்கள் கடவுளுக்கு நினைவூட்டுகிறீர்களா, என்ன? இந்த எல்லையற்ற பிரபஞ்சத்தில் எண்ணற்ற பொருட்களை நிரப்ப அவருக்கு நினைவூட்ட வேண்டுமா,என்ன? உங்களது அற்பத் தேவைகளுக்காக  உங்கள் பலவீனமான சுயத்தை அவர் மீது ஏன் சுமத்துகிறீர்கள்?மண்டியிட்டு,இரு கரங்களை நீட்டி,மற்றவர் மனதில் என்ன இருக்குமோ என்று தவிப்பதைவிட்டு,கிடைத்த பரிசுகளைப் பெற்றுக் கொண்டு ஆரவாரமின்றி நீங்கள் ஏன் உங்கள் காரியங்களை செய்து கொண்டே இருக்கக் கூடாது?உங்கள் ஆணவங்களையும், ஆசைகளையும் புகழ்களையும்,குற்றச்சாட்டுகளையும் ஒன்று திரட்டி அவர் காதில் இரைச்சலுடன் ஓலமிட்டால்,கடவுள் எங்கே இருப்பார்?அவர் உமக்குள் இல்லையா?உங்கள் எண்ணற்ற கவலைகளையும் எதிர்பார்ப்புகளையும் அவரிடம் கொண்டு போகாதீர்கள்.உங்களுக்காகக் கதவு திறந்துவிடும்படி அவரிடம் மன்றாடாதீர்கள்.அதன் திறவுகோலை முன்பே அவர் உங்களிடம்தான் கொடுத்துள்ளார்.
                     --'மிகெய்ல் நைமி'எழுதிய ''மிர்தாதின்  புத்தகம்''என்ற நூலிலிருந்து.

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (0)

Post a Comment