உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

அறிவுத்திறன்

0

Posted on : Wednesday, September 14, 2011 | By : ஜெயராஜன் | In :

ஒரு குழந்தை ஆறு வயதிற்குள் அதன் மூளையில் ஏராளமான விசயங்களைப் பதிவு செய்து கொள்ளும் ஆற்றல் கொண்டது.நமது மூளையில் 125 ட்ரில்லியன் விஷயத் துளிகளை பதிவு செய்யக்கூடிய திறன் உள்ளது.ஒரு ஆராய்ச்சி, உண்பதை விட,விளையாட்டைவிடக் கற்பதை குழந்தைகள் விரும்புகிறார்கள் என்று சொல்கிறது.குழந்தைக்கு இள வயதில் உயர்ந்த கல்வி அறிவை,வேகமாகவும் எளிதாகவும் மகிழ்ச்சியான முறையில் அளிக்க முடியும்.படிப்புத் திறன்   ,கணிதத் திறன் ,விஷய ஞானம் ஆகியவற்றை ஒரு வயதுக்  குழந்தையின் மூளையில் பதிய வைப்பது சுலபம்.எப்படி?குழந்தை இந்தத் திறமைகளை நிகழ்ச்சிகள் மூலம் பெறுகிறது.ஆனால் அந்த நிகழ்ச்சிகள் கீழ்க்கண்ட இயல்புடையதாய் இருக்க வேண்டும்.
*அவை உண்மை நிகழ்ச்சிகளாக இருக்க வேண்டும்.நமது கருத்தாக இருக்கக் கூடாது.(facts not opinions)
*அவை மிகச் சரியானதாக இருக்க வேண்டும்.(precise)
*குறிப்பிட்ட விசயமாக இருக்க வேண்டும்.(specific)
*குறிப்பிட்ட பெயருடையதாக சந்தேகமின்றி இருக்க வேண்டும்.(unambiguous)
*புதிய விசயமாகப் பார்ப்பதற்கு பெரிய அளவில் உருவாக்கப்பட வேண்டும்.
*உரத்த குரலில் உச்சரிக்கக் கூடியதாக இருக்க வேண்டும்.
உதாரணமாக குழந்தைக்கு காந்தியின் படத்தை காண்பித்துப் புரிய வைக்க வேண்டும் என்று எடுத்தக் கொள்வோம்.
*காந்தியின் படம் பெரிய அளவில் இருக்க வேண்டும்.
*அவர் பெயரைத் தெளிவாக உரத்த குரலில் படத்தைக் குழந்தை பார்க்கும்போது உச்சரிக்க வேண்டும்.
*படத்தில் காந்தி தவிர யாரும் இருக்கக் கூடாது.
*படம் தெளிவாக இருக்க வேண்டும்.
*பெயருடன் வேறு சொற்கள் சேர்க்கக் கூடாது.காந்தி என்றுதான் சொல்ல வேண்டுமே அல்லாது மகாத்மா காந்தி என்று சொல்லக்கூடாது .

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (0)

Post a Comment