உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

சுயநலம்

0

Posted on : Thursday, September 01, 2011 | By : ஜெயராஜன் | In :

உலகம் மனிதனின் உள்ளத்திலுள்ள இரக்கத்தினால் நடப்பதில்லை.அது அவனுடைய வலிமையினால் நடக்கிறது.மனிதன் வெறும் அன்பினால் வாழ்வதில்லை.அவன் மற்றவர்களைத் தோல்வியுறச் செய்து வாழ்கிறான். மனிதன் இவ்வுலகில் பாடுபடுவதெல்லாம் சுயநலத்துக்காகத்தான்.தியாகம் பற்றிய கதைகள் கோவிலுக்குப் பொருத்தமானவை.ஆனால் வாழ்க்கை என்பது கோவில் அல்ல;போர்க்களம்.
மரம் செடி கொடிகளின் வேர் பக்கத்திலுள்ள ஈரத்தை நாடிச் செல்வதுபோல  மனிதரும் தனது சுய நலத்துக்காகப் பிறரை ஆதாரமாகக் கொள்கின்றனர். இதைத்தான் உலகம் அன்பு,நட்பு,காதல் என்று கூறுகிறது.ஆனால் இது ஒவ்வொருவரும் தம்மிடமே கொள்ளும் அன்புதான்.ஒரு புறம் ஈரம் வற்றிவிட்டால் மரங்களும் வாடி விடுவதில்லை.அவற்றின் வேர்கள் வேறொரு புறத்தில் எங்கே ஈரம் என்று தேடுகிறது.அருகில் இருந்தாலும் சரி,தொலைவில் இருந்தாலும் சரி,அந்த ஈரத்தைத் தேடிக் கண்டு பிடித்து பசுமையாக இருக்கின்றன.
**********
எதுவும் தொலைவிலிருந்து பார்க்கப் பயங்கரமாகத் தோன்றுகிறது. உண்மையில் அது அச்சம் தருவதல்ல.சாவும் அப்படித்தான்.
**********
வாழ்க்கை எப்போதும் குறை உள்ளதாகத்தான் இருக்கிறது.அப்படி அது இருப்பதில்தான் அதன் இனிமை நிரம்பியிருக்கிறது.
**********
   மனிதன் தன்னை அறியாமலேயே தன்னைச் சுற்றியே வளைய  வருகிறான்.பல ஊர்களை நீர்மயமாக்கி நெடுந்தூரம் பிரளயமாகப் பரவும் பெரு வெள்ளத்தைக் காட்டிலும் தன கண்ணில் வடியும் கண்ணீர்தான் அவனுக்கு அதிக முக்கியமாகத் தோன்றுகிறது.
**********
                                            --யயாதி என்ற நூலில் விஷ்ணு சகாராம் காண்டேகர்.

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (0)

Post a Comment