உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

தாமதம் ஏன்?

0

Posted on : Tuesday, September 06, 2011 | By : ஜெயராஜன் | In :

''தினசரி வேலைக்கு தாமதமாக வருகிறாயே?''என்று முதலாளி கோபமாக முல்லாவைக் கேட்டார்.முல்லா சொன்னார்,''அதற்கு நீங்கள் தான் காரணம்'' முதலாளி ஆச்சரியத்துடன் அவரை நோக்க,முல்லா பணிவுடன் சொன்னார்,    ''நீங்கள் தான் என்னை நேரம் காலம் பார்க்காது வேலை பார்க்கக் கற்றுக் கொடுத்தீர்கள்?அதனால் இப்பொழுதெல்லாம் நான் கையில் கடிகாரம் கட்டுவது இல்லை.''
**********
புதிதாக வேலைக்கு வந்த முல்லாவிடம் முதலாளி கேட்டார்,''உனக்கு ஏற்கனவே ஐந்து வருட அனுபவம் இருக்கிறதாக நேர்முகத் தேர்வில் சொன்னாயே!ஆனால் நீ ஏற்கனவே வேலை பார்த்ததற்கான அறிகுறியே தெரியவில்லையே?''அதற்கு முல்லா சொன்னார்,''நீங்கள் தானே விளம்பரத்தில் கற்பனை வளம் மிக்கஒருவர் வேலைக்கு வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தீர்கள்?''
**********

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (0)

Post a Comment