உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

யார் பேசலாம்?

1

Posted on : Sunday, December 09, 2012 | By : ஜெயராஜன் | In :

ஒரு முறை பீகார் மாநில சம்பந்தமான பிரச்சினை ஒன்று பாராளுமன்றத்தில் விவாதத்துக்கு வந்தது.காலத்தின் அருமை கருதிஅவைத் தலைவர் இந்த விவாதத்தில் பீகார் மாநிலத்தை சேர்ந்த உறுப்பினர்கள் மட்டும் பேசலாம் என்றார்.அப்போது பாராளுமன்ற எதிர்க்கட்சி உறுப்பினராக இருந்த வாஜ்பாய் எழுந்து பேச ஆரம்பித்தார்.உடனே அவைத்தலைவர் தலையிட்டு,''நீங்கள் உத்திரப் பிரதேசத்தை சேர்ந்தவராயிற்றே.அதனால் நீங்கள் பேசக் கூடாது,'' என்றார்.அதற்கு வாஜ்பாய்,''நானும் பீகாரிதானே,'' என்றார். அவைத் தலைவருக்கு ஒன்றும் புரியவில்லை.வாஜ்பாயியே பின்னர் சிரித்துக் கொண்டு சொன்னார்,''என் முழுப் பெயர் அடல் பிகாரி வாஜ்பாய் தானே!அதனால் நானும் பேசலாம் என்று நினைத்தேன்.''

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (1)

அட! சூப்பர் தகவல்!

Post a Comment