உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

என்ன காரணம்?

1

Posted on : Thursday, December 13, 2012 | By : ஜெயராஜன் | In :

ஒரு மனிதர் தான்,'மனைவிக்கு பயப்படாதவர்கள்சங்கம்'என்று ஒன்று ஆரம்பிக்கப் போவதாகவும் தகுதியுள்ளவர்கள் குறிப்பிட்ட தேதியில் குறிப்பிட்ட இடத்தில் கூடுமாறும் அறிவிப்பு கொடுத்திருந்தார்.அதற்கு நிறையப் பேர் வந்திருந்தனர்.முல்லாவும் அங்கு ஆவலுடன் சென்றார்.தலைவர்,''ஆரம்பத்திலேயே இவ்வளவு பேர் வந்திருப்பது குறித்து மகிழ்ச்சி.இருந்தாலும் மீண்டும் சொல்கிறேன்,உண்மையிலேயே மனைவிக்குப் பயப்படாதவர்கள் மட்டும் இங்குள்ள நாற்காலிகளில் அமருங்கள்.மற்றவர்கள் தயவுசெய்து வெளியே போய் விடுங்கள்,'' என்றார்.அனைவரும் அமர்ந்து விட்டனர்.முல்லா மட்டும் நாற்காலியில் அமரவில்லை.தலைவர் காரணம் கேட்க முல்லா சொன்னார்,''எனக்கும் உட்கார ஆசைதான்.ஆனால் நேற்று இரவு என் வீட்டில்  நடந்த சண்டையில் என் மனைவி அடி பின்னிவிட்டாள்.உடலெங்கும் வேதனையாய் இருக்கிறது.அதனால் எதிலும் உட்காரக்கூட என்னால் முடியவில்லை.''

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (1)

ஹா! ஹா! ஹா! அருமை!

Post a Comment