உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

கோபத்திலிருந்து விடுதலை

0

Posted on : Thursday, December 13, 2012 | By : ஜெயராஜன் | In :

கோபம் என்பது ஒரு அரக்ககுணம்.ஒருவருக்கொருவரிடையே உள்ள மன வேறுபாட்டினாலும் ,மற்றவர்களின் பேச்சை,செயலை ஏற்றுக் கொள்ள முடியாத போதும் மற்றவர்கள் செய்யும் தவறுகளையும்,பலவீனங்களையும் பார்த்து சகித்துக் கொள்ள முடியாததாலும் மனிதனுக்கு கோபம் வருகிறது. அதிலிருந்து விடுதலை பெறுவது எப்படி?
*மற்றவர்களை சரியாகப் புரிந்து கொள்ள முடியாத போதும்,ஏற்றுக் கொள்ள இயலாத போதும்,எதிர்க்கும் போதும் அன்புடன் அவர்களுக்கு விளக்கி சொல்லி  திருத்த முயல வேண்டும்.
*உங்கள் கோபத்தை உங்களாலேயே அடக்க முடியாதபோது அடுத்தவர்களின் குறைகளை ஏன் ஆராய்ச்சி செய்ய வேண்டும்?கோபித்துக் கொள்வதை விடுத்து அவர்களைத் திருத்த முயற்சி செய்யலாமே?
*விரோதிகளிடம் பேசும்போது கூட அன்பான வார்த்தைகளைப் பயன் படுத்துங்கள்.இதனால் உங்கள் கோபம் தலை தூக்காது.மற்றவர்களின் கோபமும் தணிந்து விடும்.
*அதிக வெப்ப நிலையில் உள்ள இரும்பைக்கூட குளிர்ந்த இரும்பு வெட்டி விடுகிறது.ஆகவே காரசாரமாகப் பேசுபவரிடம் அமைதியாகப் பேசினால் உறுதியாக வெற்றி கிடைக்கும்.
*மற்றவர்களுக்குத் துன்பம் கொடுக்கும்போது நாமும்  துன்பம் அடைகிறோம் என்பதனை உணர வேண்டும்.அமைதியாக காரியங்களை செய்து வெற்றி காண வேண்டும்.
*சிறு கோபமோ,பெரிய கோபமோ முதலில் ஏதோ பலன் கிட்டியதுபோலத் தோன்றினாலும் நன்கு யோசித்தால் அதில் நிரந்தரப் பயன் ஏதும் இல்லை என்பது விளங்கும்.எல்லாவற்றிற்கும் மேல் கோபத்தினால் நாம் விலை மதிப்பற்ற நமது நிம்மதியை இழந்து விடுகிறோம்.
*மற்றவர்கள் நம்மீது கோபித்தால் அது நமக்குப் பிடிக்கிறதா?அதேபோல நமது கோபமும் அடுத்தவர்களுக்குப் பிடிக்காதல்லவா?ரோஜாவாக இருந்தால்  எவ்வளவு அழகாக இருக்கும்?அதை விடுத்து ஏன் ரோஜாவின் முள்ளாக இருக்க வேண்டும்?தீர்க்கமாக சிந்தித்தால் கோபம் நம்மைவிட்டு தானாகவே ஓடிவிடும்!

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (0)

Post a Comment