உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

மீன் காப்பாற்றியது

1

Posted on : Wednesday, December 19, 2012 | By : ஜெயராஜன் | In :

முல்லா தனது பயணத்தின்போது ஒரு பெரும் ஞானியை சந்தித்தார்.அவரைப் பார்த்ததுமே அவருக்கு மிகுந்த மரியாதை ஏற்பட்டது.எனவே அவரை அணுகி வணங்கினார்.ஒரு பழுத்த மதவாதிபோல முல்லா தோன்றியதால் ஞானியும் அவரை மகிழ்வுடன் வரவேற்றார்.அந்த ஞானி, விலங்குகள், பறவைகள், பூச்சிகள் ,மீன்கள் ஆகியவற்றின் மீது அளவற்ற பாசம் கொண்டவர்.இதை அங்கு வருமுன்னேயே முல்லா கேள்விப்பட்டிருந்தார்.இருவரும் பேசிக்கொண்டிருந்தனர்.அப்போது முல்லா,''ஒரு சமயம் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த என்னை ஒரு பெரிய மீன்தான் காப்பாற்றியது,'' என்றார்.ஞானிக்கு ஆர்வம் உண்டாகி அந்த  நிகழ்ச்சியை விளக்கமாக சொல்ல சொன்னார்.முல்லா சொன்னார்,''ஒரு முறை கடல் கரை ஓரமாக நீண்ட பயணம் மேற்கொண்டேன்.ஆள் யாரும் இல்லாத இடம் ஒன்றில் சென்று கொண்டிருக்கும்போது எனக்கு கடும் பசி ஏற்பட்டது.இரண்டு நாளாக சாப்பிடவில்லை.இனிமேலும் தாங்க முடியாத நிலை.வேகமாக கடற்கரைக்கு ஓடி சென்று ஒரு பெரிய மீனை பிடித்து தீயில் வாட்டி சாப்பிட்டேன்.அந்த மீன் மட்டும் இல்லாவிடில் நான் அன்று உயிருடன் இருந்திருக்க மாட்டேன்.''

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (1)

அருமை! பகிர்வுக்கு நன்றி!

Post a Comment