உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

கடி, கடி

1

Posted on : Wednesday, December 05, 2012 | By : ஜெயராஜன் | In :

''நிதி நிறுவனத்துக்கும்,குதிரைப் பந்தயத்துக்கும் இடையே உள்ள தொடர்பு என்ன தெரியுமா?''
'நீயே சொல்லு,'
''நிதி நிறுவன அதிபர்  ஓட மாட்டார் என்று நினைத்துப் பணத்தைப் போட்டால்  அவர் ஓடி விடுவார்.ஓடிவிடும் என்று நினைத்து குதிரையின் மீது பணம் கட்டினால் அது ஓடாது.''
******
''நான் தோசை செய்தேன்.''
நிஜமாவா?
''நிஜ மாவில் செய்யவில்லை.அரிசி மாவில் செய்தேன்.
******
''இந்தக் கடிதம் மொட்டைக் கடிதம் என்று எப்படி சொல்கிறாய்?''
'நாலு மூலையிலும் சந்தனம் தடவி இருக்கே!'
******
நம்ம தலைவர் பேசிக்கிட்டிருந்தபோது எதிரே இருந்த மரங்களெல்லாம் விழுந்து விட்டதாமே!
''அவருதான் பேசியே அறுத்திட்டாரே!''
******
''ஏண்டா தேர்வு அறையில் தூங்குகிறே?''
'நீங்கதானே கேள்விக்கு பதில் தெரியலை என்று முழிச்சிக்கிட்டு இருக்காதே என்று சொன்னீர்கள்?
******
ஆசிரியர்:ஏதேனும் ஒரு திரவத்தின் பெயரை சொல்லு,''
மாணவன்:உபத்திரவம்.
******
''எங்க அப்பா பத்து ஆண்டாக வியாபாரம் செய்கிறார்.ஆனால் சேமிப்பே இல்லை.''
'என்ன வியாபாரம்?'
சேமியா வியாபாரம்.''
******
''ரெண்டு கண்ணிருக்கே,அரிசியில் ஒழுங்காய் கல்லைப் பொறுக்க முடியாதா?''
'முப்பத்திரண்டு பல்லு இருக்கே,மெல்ல முடியாதா?'
******
''போன வாரம் உங்க கடையில் வாங்கின பருப்பில முழுவதும் ஓட்டையாயிருந்தது.''
நீங்க எழுதிக் கொடுத்ததைப் பாருங்க!நீங்க துவாரம் பருப்பு வேண்டும்  என்று தானே எழுதியிருக்கிறீர்கள்!'
******

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (1)

ஐயோ தாங்க முடியலை! செமகடி!

Post a Comment