உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

சுலபம்

1

Posted on : Tuesday, December 04, 2012 | By : ஜெயராஜன் | In :

அந்தரே என்பவர் இலங்கை மன்னரின் சபையில் இருந்த விகடகவி.அவர் சிறுவனாயிருக்கும்போது வீட்டிற்கு அருகில் ஒரு கிழவியிடம் அப்பங்கள் வாங்கி வருவார்.கிழவி ஒரு நாள் அவரை எமாற்ற நினைத்து சிறு சிறு அப்பங்களாகத் தந்தாள்.அந்தரே ,''ஏன் சிறு அப்பங்களாகத் தருகிறாய்?''என வினவ கிழவியும் ,''நீ சிறிய பையன்.சிறு அப்பத்தைத் தூக்கிச் செல்வது எளிதாக இருக்கும்.''என்றாள்'பணம் கொடுக்கும்போது அந்தரே ஒரு ரூபாய்க்குப் பதிலாக ஐம்பது காசுகள் மட்டும் கொடுத்தவுடன் கிழவி,''காசு குறைவாக இருக்கிறதே?''என்று கேட்டாள்.அதற்கு அந்தரே,''வயதான உனக்கு காசை எண்ணிப் பார்க்க சுலபமாக இருக்கும் என்றுதான் குறைவாகக் கொடுத்தேன்.''என்றார்.

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (1)

புத்திசாலிப் பையன்! அருமையான பகிர்வு!

Post a Comment