உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

பயம்

2

Posted on : Wednesday, December 05, 2012 | By : ஜெயராஜன் | In :

அன்றாட வாழ்க்கையை ஒட்டிய பயம்,இறப்பைப் பற்றிய பயம்,துயரம் விளைந்து  விடுமோ என்ற பயம்,அர்த்தமற்ற வாழ்க்கை வாழ்கிறோமோ என்ற பயம்,இருப்பதை இழந்து விடுவோமோ என்ற பயம் இப்படி பல்வேறு பயங்களில்  நாம் வாழ்கிறோம்.பயத்தைப் போக்க சிறந்த வழி,அப்பயத்தை நேரடியாக எதிர்கொள்வதுதான்.எவ்வளவு பயப்படுகிறோமோ அந்த அளவு அது நம்மை பயமுறுத்துகிறது.இதற்கு என்னதான் தீர்வு?
கடந்ததை மறந்து விடுங்கள்.கடந்த காலத்தில் நடந்த எதையும் உங்களால் மாற்ற முடியாது.மாற்ற முடியாத ஒன்றை எதற்காக மனதில் வைத்து வதைபடுகிரீர்கள்?கண்ணிலிருந்து மறைந்ததைப் பற்றியோ,கண்ணுக்குப் புலப்படாததைப் பற்றியோ கவலைப் படுவதால் ஒரு பயனும் இல்லை.ஆறாத ரணம் என்று எதுவும் இல்லை.ஒரு வாரத்தில் ஆறும்.அல்லது ஒரு மாதத்தில் ஆறும்.நேற்றைய காயம் நாளைய வடு.அது மறைவதில்லை.அதே சமயம் வலிப்பதுமில்லை.ஒரு கதவு மூடும்போது இன்னொரு கதவு திறந்து கொள்கிறது.இது இயற்கை வகுத்த நியதியாகும்.உங்களால் சுமக்க முடியாத எந்த சுமையையும் கடவுள் உங்களுக்கு அளிக்க மாட்டார்.ஆகவே கவலைப்பட ஏதுமில்லை.அன்றைய உணவு,அன்றைய உறக்கம் என்பதுபோல அன்றைக்கான கவலைகளே போதும்.நேற்றைய கவலை,இன்றைய கவலை,நாளைய கவலை என்று பளுவைத் தூக்கிக் கொள்ளாதீர்கள்.

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (2)

நல்ல அறிவுறை!

படிதேன். மனம் லேசானது!
சரவணபவா-USA

Post a Comment