உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

பொன்மொழிகள்-36

0

Posted on : Tuesday, December 04, 2012 | By : ஜெயராஜன் | In :

ஒருவனது குறிக்கோளைக் கொண்டே அவன் எத்தகையவன் என்பதை அறியலாம்.
******
எவனிடம் வீரமில்லாத ஒழுக்கமோ,ஒழுக்கம் இல்லாத வீரமோ உள்ளதோ அவனே கோழை.
******
ஒரு நல்ல நூலைப்போல சிறந்த நண்பன் வேறில்லை.
******
பொருளற்றவனைக் காட்டிலும் பொருளுடையவனே மிகவும் துன்புறுகிறான்.
******
மற்றவருக்கு ஆறுதல் சொல்லும்போது இருக்கும் தைரியம் தனக்கு தேவைப்படும்போது இருப்பதில்லை.
******
திருட்டுப் பொருளை விலை கொடுத்து வாங்குபவன் திருடனை விட மோசமானவன்.
******
சிக்கனமாக இல்லாதவன் மகிழ்ச்சியாக வாழ முடியாது.
******
புகழ் என்பது ஒருவன் தன்னோடு வைத்து வளர்க்கும் சொந்த ஆபத்து.
******
உலகிற்கு மனிதன் தனியாக வருவதுபோல உலகிலிருந்து தனியாகவே போகிறான்.
******
எதிரி ஓடிவிட்டால் எவனும் வீரன்தான்.
******
வறுமையில் கசந்தால்தான் செல்வத்தின் இனிமை தெரியும்.
******
செயலே புகழ் பரப்பும்;வாய் அல்ல.
******
சிரிப்பு,குழந்தை உலகின் இசை.
******

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (0)

Post a Comment