உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

லஞ்சம்

0

Posted on : Friday, December 07, 2012 | By : ஜெயராஜன் | In :

நாட்டில் லஞ்சம் எங்கும் தலை விரித்தாடுகிறது என்று சொல்கிறோம்.பல நூற்றாண்டுகளுக்கு முன் கடுமையான நிர்வாக நியதிகளைப் படைத்த சாணக்கியர் இது குறித்து என்ன சொல்கிறார் என்று பார்ப்போமா?
''நாக்கின் மீது வைக்கப்பட்டது தேனானாலும்,விசமானாலும் ருசி பார்க்காமல் இருப்பது எப்படி இயலாத காரியமோ,அப்படியே பண விவகாரங்களைப் பார்க்கின்ற அதிகாரிகளும் கொஞ்சமாவது அரசாங்கப் பணத்தை ருசி பார்க்காமல் இருக்க மாட்டார்கள்.''
''நீரில் நீந்தும் மீன்கள் எப்போது நீரைக் குடிக்கின்றன என்று அறிந்து கொள்வது மிகவும் கடினம்.அது போலவே,அந்தந்த காரியங்களை நிர்வாகம் செய்யும் திறமையான அதிகாரிகள்,பணத்தை எவ்வாறு அபகரித்துக் கொள்வார்கள் என்பதை அறிவது மிகவும் கடினம்.''
''வானில் பறக்கும் பறவைகளின் வழியையாவது குறிப்பிடலாம்.ஆனால் மேலுக்கு எதுவும் தெரியாமல் வேலை செய்யும் அதிகாரிகள் எந்த வழியில் பணத்தை அபகரிக்கிறார்கள் என்பதை அறிய இயலாது.''
********
அந்தக் காலத்தில் சாப்பாட்டின் அளவு எவ்வளவு இருந்தது  என்பதை சாணக்கியரின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
வீரனுக்கு::ஒரு படி அரிசி,கால் படி பருப்பு வகைகள்,இதில் பதினாறில் ஒரு பாகம் உப்பு,நான்கில் ஒரு பாகம் எண்ணெய்அல்லது நெய்.
ஆண்களுக்கு:ஒரு படி அரிசி,அதற்கு ஆறில் ஒரு பங்கு பருப்பு வகைகள்,அதில் பாதிக்கு எண்ணெய் .
பெண்களுக்கு:ஆண்களின் உணவில் முக்கால் பங்கு.
சிறுவர்களுக்கு:அரைப்பங்கு.
********

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (0)

Post a Comment