உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

வாதத்திறமை

1

Posted on : Tuesday, December 11, 2012 | By : ஜெயராஜன் | In :

அவர் ஒரு புரட்சியாளர்.பொது உடைமைவாதி.தீவிர நாத்திகவாதி.அவர் இறந்தவுடன் அவரை நரகத்திற்குக் கொண்டு போனார்கள்.ஒரு வாரம் கழிந்தது..நரகத்தின் அதிபதி மிகுந்த விசனத்துடன் சொர்க்கத்தின் அதிபதியைப் பார்க்க வந்தார்.விபரம்என்ன என்று கேட்க அவர் சொன்னார்,''ஒரு புரட்சியாளரை என்னிடம் அனுப்பியிருக்கிறார்கள்.அவரோட தொல்லை தாங்க முடியவில்லை.தண்டனைகள் கடுமையாயிருக்கிறது என்று எல்லோரையும் கூட்டி ஆர்ப்பாட்டம் செய்கிறார்.குளிர் பதனவசதி வேண்டுமாம்.ரொம்ப நேரம் வேலை வங்கக் கூடாதாம்.அவர் வந்ததும் அனைவரும் அவர் பின்னே சென்று விட்டனர்.எனக்காக அவரை ஒரு மாதம் மட்டும் உங்களிடம் வைத்துக் கொள்ளுங்களேன்,''சொர்க்கத்தின் அதிபதி,''இது பற்றி கடவுளிடம் கேட்க வேண்டாமா?''என்று கேட்க நரகத்தலைவர்,''ஒரு மாதம்தானே,நமக்குள் இது இருக்கட்டும்.ஒரு மாதம் கழிந்தபின் நானே வந்து அவரை அழைத்து சென்று விடுகிறேன்,''என்று சொல்லவும் தட்ட முடியாமல் அந்த புரட்சியாளரை சொர்க்கத்தில் தங்க அனுமதி கொடுத்தார்.ஒரு மாதம் கழிந்தது.வாக்குத் தவறாமல் நரகத்தலைவர் வந்து சொர்க்கத்திலிருந்த  அந்த மனிதரை அழைத்து செல்ல வந்தார்.இப்போது சொர்க்கத்தலைவர் ,''அதற்குள் ஒரு மாதம் ஆகி விட்டதா!அவர் என்னிடமே இருக்கட்டுமே!இந்த ஒரு மாதத்தில் எனக்கு அவர் நல்ல நண்பர் ஆகி விட்டார்.என்னுடன் நல்லபல விவாதங்களை நடத்துகிறார்.பொழுது போவதே தெரியவில்லை.'' என்றார்.அதிர்ச்சியுற்ற நரகத்தலைவர்,''நிரந்தரமாக அவர் உங்களிடம் இருக்க வேண்டுமானால் கடவுளிடம் அனுமதி வாங்க வேண்டுமே''என்று கவலை தெரிவித்தார்.உடனே சொர்க்கத்தலைவர் சொன்னார்,''கடவுளா!கடவுள் என்ற ஒன்றே கிடையாதே!கடவுள் இருக்கிறார் என்று யார் சொன்னது?''

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (1)

அப்படி போடு அருவாளை! அருமை!

Post a Comment