உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

தேர்ந்த தகவல்கள்

1

Posted on : Thursday, December 06, 2012 | By : ஜெயராஜன் | In :

மூங்கில் ஒரு நாளைக்கு பதினைந்து அங்குலம் வரை வளரும்.
******
ஈ,எறும்பு முதலிய பூச்சிகளுக்கு கேட்கும் சக்தி கிடையாது.
******
ஹவாய் நாட்டின் மொழிக்கு பன்னிரண்டு எழுத்துக்கள்தான் உண்டு. உலகிலேயே குறைந்த எழுத்துக்கள் கொண்ட மொழி இதுதான்.
******
மெட்ரே டி டயாஸ் (madro de dias)என்ற பிரெஞ்சுச் சொல்லின் மறு வடிவமே மதராஸ் ஆகும்.
******
இந்தியாவின் முதல் நகராட்சி சென்னைதான்.இது உருவானது 1688ல் .
******
துப்பாக்கியைத் தனது நாட்டின் கொடியில் சின்னமாக வைத்திருக்கும் ஒரே நாடு மொசாம்பிக்.
******
ஒருவர் தும்மும்போது நீர்த்திவலைகள் மணிக்கு நூறு மைல் வேகத்தில் செல்லக் கூடியவை.
******
வெள்ளைப் புரட்சி என்பது பால் வளம் பெருக்குதல்.
******
இந்தியாவில் முதல் முதலாக ஒரு ரூபாய் நாணயம் 1542ல் மன்னர் செர்ஷாவின் ஆட்சியில் வெளியிடப்பட்டது.இது சுத்தமான வெள்ளியில் 179கிராம் எடை கொண்டது.
******
பாண்டிச்சேரியின் முன்னாள் பெயர்கள் வேதபுரி,அகத்தீஸ்வரம்.
******
எவரெஸ்ட் சிகரம் இந்தியாவின் முன்னாள் சர்வேயர் ஜெனரல் சர்.ஜார்ஜ் எவரெஸ்டின் நினைவாகப் பெயரிடப்பட்டது.
******
யூகலிப்டஸ் மரம் 'பச்சைத்தங்கம்' என்று அழைக்கப்படுகிறது.
******
அரசாங்க முத்திரையில் பதிக்கப்பட்டுள்ள 'சத்யமேவ ஜெயதே'எனும் வாசகம் முண்டக உபநிசத்திலிருந்து எடுக்கப்பட்டுள்ளது.
******


தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (1)

பயனுள்ள தகவல்கள்! நன்றி!

Post a Comment