உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

உப்பா,சர்க்கரையா?

1

Posted on : Sunday, December 09, 2012 | By : ஜெயராஜன் | In :

பாரசீகத்தை சாஞ்சன் என்னும் மன்னன் ஆண்டபோது அவரது அரசவையில் ரஷீத்,பொகானி என்ற இரண்டு பெரும் புலவர்கள் இருந்தனர்.இருவருமே சிறப்பாக செயல் படக்கூடியவர்கள்.இருந்தபோதும் அவர்களுக்குள் கடும் காழ்ப்புணர்ச்சி.ஒருவரை ஒருவர் காலை  வாருவதற்கான வாய்ப்பைத் தேடிக் கொண்டிருப்பார்கள்.ஒருநாள் மன்னர் பொகானியிடம் கேட்டார்,''ரஷீத்தின் கவிதைகள் எப்படி?உங்கள் அபிப்பிராயம் என்ன?''பொகானி சொன்னார், ''நன்றாகத்தான் இருக்கிறது.ஆனாலும் உப்பு போதாது.''மன்னர் சிரித்துக் கொண்டே ரஷீத்திடம் இதுபற்றி அவருடைய பதிலைக் கேட்டார்.ரஷீத்தும் சிரித்துக் கொண்டே,''அவர் சொன்னது நூற்றுக்கு நூறு சரி. ''என்றார். அவருடைய பதில் கேட்டு அவரை ஆச்சரியத்துடன் பார்த்தார்,பொகானி.ரஷீத் தொடர்ந்தார்,''எனது கவிதை வரிகளில் தேனும் சர்க்கரையும் அதிகமாக இருக்கும்.உப்பு அதில் இருந்தால் அது கெட்டு விடும்.அதனால்தான் என் கவிதைகளில் நான் உப்பு சேர்ப்பதில்லை.ஆனால் பொகானி யின் கவிதைகளில் உப்பு அதிகம்.ஏனெனில் அவருடைய கவிதைகள் அழுகிய முட்டைக்கோஸ்,கத்தரிக்காய் போன்றது.அது தெரியாமல் இருக்க வேண்டும் என்றால் நிறைய உப்பு போட வேண்டும் அல்லவா?''

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (1)

நல்ல பதிலடிதான்!

Post a Comment