உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

தைரியசாலி

1

Posted on : Monday, March 28, 2011 | By : ஜெயராஜன் | In :

சாக்ரட்டீசுக்கு விஷம் வைத்துக் கொள்ள வேண்டும் என்று தீர்ப்பு சொல்லிய நீதிபதி,கொஞ்சம் இரக்க புத்தி உள்ளவர்.அவர் சாக்ரடீசிடம்,''நான் எப்படியோ சமாளித்துக் கொள்கிறேன்.இந்த நகரத்தை விட்டு விரைவில் வெளியேறி விடுங்கள்.நீங்கள் சாகக்கூடாது,''என்றார்.அதற்கு சாக்ரடீஸ்,''இறப்பு என்பது ஒருவனுக்குக் கண்டிப்பாக வரக்கூடியது.கிரேக்கத்திலே நாகரீகமான் இந்த ஏதன்ஸ் நகரே என்னை ஏற்றுக் கொள்ளவில்லை என்றால்,வேறு யார் என்னை சகித்துக் கொள்வர்?வேறு இடத்திற்குப் போனாலும் இதே நிலைதான் வரும் எனவே இங்கேயே பிறந்து இங்கேயே வாழ்ந்த நான் இங்கேயே மரணம் அடைந்து கொள்கிறேன்,''என்றார்.அதற்கு நீதிபதி,''நான் வேறு ஒரு யோசனை சொல்கிறேன்.நீங்கள் பேசுவதனால் தானே  இங்குள்ள இளைஞர்கள் கெட்டுப் போகிறார்கள் என்று சொல்கிறார்கள்.கொஞ்ச காலம் பேசாமல் இருந்து பாருங்களேன்.இந்த வயதில் அமைதியாக இருப்பது உங்களுக்கும் நல்லது,''என்றார்.சாக்ரட்டீஸ்,''அதாவது,நான் பயந்து கொண்டு பேசாமல் இருக்க வேண்டும் என்று கூறுகிறீர்கள்.இது என்னால் முடியாத  காரியம்.உண்மையை சொல்லாமல் நான் உயிரோடு இருப்பதில் அர்த்தமில்லை.எனவே நீங்கள் எனக்காகக் கவலைப்பட வேண்டாம்.''என்று கூறினார்.சாக்ரடீஸ் போன்ற தைரியசாலிகள் உலக வரலாற்றிலேயே மிகக் குறைவு.

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (1)

சாவு என்பது ஒரு உலகத்திலிருந்து மற்றொரு உலகத்திற்கான பயணம் அங்கே வெறொரு வாழ்வுண்டு என்பதாக சாக்ரடீஸ் முழுவதுமாக நம்பியிருந்தார்.

Post a Comment