உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

யாரிடம் கேட்பது?

0

Posted on : Monday, March 28, 2011 | By : ஜெயராஜன் | In :

நீண்ட தூரம் புகை வண்டியில் பயணம் செய்து வந்து இறங்கிய கணவனை வரவேற்க வந்திருந்தாள் அவன் மனைவி.அவனைப் பார்த்ததும் அவள்,''என்ன, இவ்வளவு சோர்வாக இருக்கிறீர்கள்?''என்று கேட்டாள்.கணவன்,''அதை ஏன் கேட்கிறாய்?நீண்ட தூர பயணம்.மேலும் எனக்குக் கிடைத்த இருக்கை புகை வண்டி செல்லும் திசைக்கு எதிரில் வேறு அமைந்திருந்ததால்,ஒரே தலைவலி.''என்றான்.அவள் உடனேயே,''அப்படியானால் நீங்கள் யாரிடமாவது கேட்டு இடத்தை மாற்றிக் கொண்டிருக்கலாமே?''என்று கேட்டாள்.அவனும்,''நானும் அப்படித்தான் நினைத்தேன்.ஆனால் என் முன் இருக்கைகளில் யாருமே இல்லையே!நான் யாரிடம் கேட்பது?''என்றான்.

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (0)

Post a Comment