உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

இயற்கை

0

Posted on : Saturday, March 12, 2011 | By : ஜெயராஜன் | In :

ஒருவர் டாக்டரிடம் கூறினார்,''டாக்டர்,நேற்று நான் உங்களிடம் என் மகன் படுக்கையில் சிறு நீர் கழிப்பது குறித்துப் பேசினேன்.நீங்கள் கூட அது இயற்கை தான் என்றும் பயப்படுவதற்கு ஒன்றுமில்லை என்று சொன்னீர்கள்.ஆனால் எனக்கு அது உடன் பாடாய் இல்லை.இருந்தாலும்,வீட்டில் போய் இதுபற்றி பேசினேன்.அவன் மனைவி கூட இது இயகையானது இல்லை என்று தான் பயப்படுகிறாள்.
**********
மருத்துவ மனையில் இருந்த ஒரு நோயாளி,''டாக்டர்,இன்று எனக்கு ஒரு மாதிரியாக இருக்கிறது.உண்மையில் எனக்கு என்ன பிரச்சினை?''என்று கேட்டார்..டாக்டரும் முழுமையாக சோதித்துவிட்டு,''எனக்கு உண்மையை சொல்வதைத் தவிர வேறு வழியில்லை.நீங்கள் உயிருடன் இன்னும் பத்து....''என்று அவர் முடிக்குமுன்,நோயாளி,''சொல்லுங்கள்,பத்து வருடமா, மாதமா,வாரமா,நாட்களா?''.என்று கேட்டார்.டாக்டர் தலையை ஆட்டிவிட்டு,''பத்து,ஒன்பது,எட்டு.......''என்று எண்ண ஆரம்பித்தார்.
**********
''டாக்டர்,எனக்கு கையெல்லாம் ரொம்பவே நடுங்குது.''
'நீங்கள் அதிகம் குடிப்பீர்களா?'
''என்னத்த சொல்ல,அதுதான் குடிக்குமுன் முக்கால் வாசி சிந்தி விடுகிறதே!''
**********
நர்ஸ்:டாக்டர் நீங்கள் பார்த்த நோயாளி,படிக்கட்டில் இறங்கி செல்லும்போது விழுந்து இறந்து விட்டார்.நான் என்ன செய்ய?''
டாக்டர்:படிக்கட்டில் அவன் உடலைத் திருப்பிப்போடு .யாரும் பார்த்தால் அவன் என்னைப் பார்க்க வரும்போது ,விழுந்து இறந்துவிட்டான் என்று நினைப்பார்கள்.
**********
டாக்டர் தன மாணவர்களுக்கு ஒரு எக்ஸ் ரேயைக் காண்பித்து,''இந்த நோயாளி மூட்டு எலும்பு வளைந்து இருப்பதால்,நொண்டுகிறார்.''என்று விளக்கிவிட்டு,ஒரு மாணவனைப்பார்த்து,'',''இந்த மாதிரி கேசில் நீ என்ன செய்வாய்?'' என்று கேட்டார்.அந்த மாணவன் சொன்னான்,''ஏன்,நானும் கூடத்தான் நொண்டுவேன்''
**********

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (0)

Post a Comment