உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

பொறுப்பு

0

Posted on : Thursday, March 24, 2011 | By : ஜெயராஜன் | In :

நீங்கள் எப்போது உங்கள் பொறுப்பை பிறரிடம் கொடுக்கிறீர்களோ,அப்போதே சுதந்திரத்தை இழக்கிறீர்கள் என்பதைப் புரிந்து கொள்வதில்லை.எப்போது நீங்கள் இருப்பவரிடமோ அல்லது இறந்தவரிடமோ சரணாகதி அடைகிறீர்களோ,அப்போதே உங்களை அழித்துக் கொள்கிறீர்கள்.அது மாத்திரமல்ல.உங்கள் தனித்தன்மையைப்  பொறுத்தவரை,நீங்கள் தற்கொலை செய்து கொள்கிறீர்கள்.ஆனால் பல பேர்,தங்களுடைய பொறுப்பிலிருந்து  விடுதலை அடையும்போது மிகவும் திருப்தி கொள்கிறார்கள்.ஏதோ சுமை குறைந்ததுபோல உணருகிறார்கள்.சிலபேர் இந்தப் பொறுப்பை தாங்களே மனமுவந்து எடுத்துக் கொள்கிறார்கள்.அவரைத்தான் நீங்கள் உங்களைக் காப்பாற்ற வந்தவர் என்று கருதிக் கொள்கிறீர்கள்.நீங்கள் அவரை நம்பி பொறுப்பைத் தட்டிக் கழிக்கிறீர்கள்.இந்த உலகில் ஆராயாமல் நம்புவதைக் காட்டிலும் சுலபமான வேலை எதுவும் இல்லை.ஏனென்றால்,இந்த செயலுக்காக எந்த சிரமும் பட வேண்டியதில்லை.

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (0)

Post a Comment