உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

நாகரீகம்

0

Posted on : Friday, March 11, 2011 | By : ஜெயராஜன் | In :

ஆப்பிரிக்கக் காடுகளில் ஆய்வு செய்ய இங்கிலாந்திலிருந்து ஒரு  விஞ்ஞானியும் அவரது உதவியாளரும் வந்தனர்.ஒரு நாள் அவர்கள் மனித மாமிசம் சாப்பிடும் ஒரு கும்பலிடம் மாட்டிக் கொண்டனர்.விஞ்ஞானி பயந்து விட்டார்.அப்போது அந்த கும்பலில் ஒருவன் ஆங்கிலத்தில் அவர் எங்கிருந்து வருகிறார் என்ற விபரம் கேட்டான்.ஆச்சரியமடைந்த அவர் அவனுக்கு ஆங்கிலம் எப்படித் தெரியும் என்று கேட்க, அவனும் தான் சிறிது காலம் லண்டனில் இருந்து படித்ததாகக் கூறினான்.''நாகரீகமான ஒருவன் இருக்கிறான்,நாம் தப்பினோம்,''என்று எண்ணிய விஞ்ஞானி,''அப்படியானால் உங்கள் கூட்டத்திற்கு நல்ல நாகரீகம் கற்றுக் கொடுத்திருப்பாயே ?''என்று கேட்டார்.அவன் அமைதியாக சொன்னான்,''ஆமாம்,இப்போதெல்லாம் எங்கள் ஆட்கள் நர மாமிசத்தை ஸ்பூன்,முள் கரண்டி கொண்டுதான் சாப்பிடுகிறார்கள்.''

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (0)

Post a Comment