உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

தாயின் நினைவு

0

Posted on : Tuesday, March 22, 2011 | By : ஜெயராஜன் | In :

எந்த உணவு கொடுத்தாலும்,''இது எனக்குப் பிடித்தமானதாயிற்றே,''என்று சொல்லி ஒரு வெட்டு வெட்டுவது முல்லாவின் வழக்கம்.அவனுக்குப் பாடம் கற்பிக்க அரசர் ஒரு விருந்து வைத்தார்.விருந்தில் வைத்த எல்லா உணவுகளையும் ,''எனக்கு இது ரொம்பப் பிடிக்கும்,''என்று சொல்லியவாறு சாப்பிட்டான்.விருந்தின் முடிவில் மிளகாய்த்தூள் மிக அதிகமாகச் சேர்த்து மீன் வறுவல் பரிமாறப்பட்டது.அதை சாப்பிடும்போது முல்லாவின் நாக்கு துடித்தது.மூக்கிலும் கண்களிலும் நீர் வடிந்தது.அரசர்,''முல்லா,ஏன் கண்ணீர் வடிக்கிறாய்?மீன் பிடிக்கவில்லையா?"என்று கேட்டார்.முல்லா சொன்னான்,''அரசே,என் தாய் தினமும் இப்படித்தான் காரமான மீன் கறி சமைத்துப் போடுவாள்.இப்போது அவள் உயிருடன் இல்லை.இதை சாப்பிட்டதும் எனக்கு என் தாயின் நினைவு வந்து விட்டது.அதனால் என்னையறியாது கண்ணீர் வந்து விட்டது.''முல்லா சமாளித்த திறமையைக் கண்டு அரசருக்கு ஆச்சரியம்.

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (0)

Post a Comment